எலனியக் காலம்
கிமு 323 முதல் 31 வரையிலான மத்திய தரைக்கடல் வரலாற்றின் காலம் / From Wikipedia, the free encyclopedia
ஹெலனிய காலம் (Hellenistic period) (கிமு 323 – கிபி 31) என்பது கிமு 323இல் பேரரசர் அலெக்சாண்டரின் இறப்பிற்கும், கிபி 31இல் உரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் இடையே, பண்டைய கிரேக்க நாட்டிலும், மத்தியதரைக் கடல் ஒட்டியப் பகுதிகளின் வரலாறுகளை கூறும் காலமாகும். மேலும் இக்கால கட்டத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு ரோமனியர்களால் வீழ்த்தப்பட்டது[1] [2]ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் கிரேக்க காலனி ஆதிக்கத்தை நிறுவப்பட்டதே ஹெலனிய காலத்தின் சிறப்பம்சம் ஆகும். [3]