எம். பாத்திமா பீவி
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதியரசர் / From Wikipedia, the free encyclopedia
நீதியரசர் எம். பாத்திமா பீவி (Justice M. Fathima Beevi) இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதியரசர் ஆவார்.(1989)[1][2][3][4][5][6] உயர்ந்த நீதித்துறை பதவிகளை ஏற்ற முதல் முஸ்லிம் பெண்மணியாகவும் விளங்கினார். இந்தியா மட்டுமன்றி ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் உடையவர்.[7] தமது பணி ஓய்விற்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு உறுப்பினராகவும் 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.[2][8][9]
விரைவான உண்மைகள் நீதியரசர் எம். பாத்திமா பீவி, பிறப்பு ...
நீதியரசர் எம். பாத்திமா பீவி | |
---|---|
பிறப்பு | 30 ஏப்ரல் 1927 (1927-04-30) (அகவை 97) பத்தனம்திட்டா, கேரளம் |
இறப்பு | 23 நவம்பர் 2023 |
இருப்பிடம் | 8/387, அன்னவீடு, பேட்டை, பத்தனம்திட்டா, 689 645 (கேரளா) |
தேசியம் | ![]() |
அறியப்படுவது | இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதியரசர், தமிழ்நாட்டின் ஆளுநர் |
முன்னிருந்தவர் | எம் சன்னா ரெட்டி / கிருஷண் காந்த் (கூடுதல். பொறுப்பு) |
பின்வந்தவர் | முனைவர் சி ரங்கராஜன் (ஆளுநர் பொறுப்பில்) |
சமயம் | இசுலாம் |
பெற்றோர் | மீரா சாகிப், கதீஜா பீபி |
மூடு