என்றி கர்னி
From Wikipedia, the free encyclopedia
சர் என்றி கர்னி அல்லது சர் என்றி லோவல் கோல்ட்சுவொர்த்தி கர்னி (மலாய்; ஆங்கிலம்: Sir Henry Lovell Goldsworthy Gurney; சீனம்: 亨利·葛尼) (27 சூன் 1898 - 6 அக்டோபர் 1951) என்பவர் பிரித்தானியப் பேரரசில் முழுவதும் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பிரித்தானிய காலனித்துவ நிர்வாகி ஆவார்.
விரைவான உண்மைகள் சர் என்றி கர்னி Sir Henry GurneyKCMG; KStJ, மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் ...
சர் என்றி கர்னி Sir Henry Gurney | |
---|---|
![]() | |
மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் | |
பதவியில் 1 அக்டோபர் 1948 – 6 அக்டோபர் 1951 | |
முன்னையவர் | சர் எட்வர்ட் ஜென்ட் (Sir Edward Gent) |
பின்னவர் | படைத்துறை உயர் தளபதி சர் ஜெரால்ட் டெம்பிளர் (Sir Gerald Templer) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1898-06-27)27 சூன் 1898 கார்ன்வால், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 6 அக்டோபர் 1951(1951-10-06) (அகவை 53) பிரேசர் மலை, பகாங், மலாயா கூட்டமைப்பு |
Manner of death | படுகொலை |
துணைவர் | இசபெல் லோதர் வீர் |
கல்வி | வின்செஸ்டர் கல்லூரி |
மூடு
மலாயாவின் கூட்டமைப்பில் உயர் ஆணையராகப் பணியாற்றிய போது, மலாயா அவசரகாலத்தின் போது பொதுவுடைமைக் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
என்றி கர்னி, மலாயாவில் பொதுவுடைமைச் சித்தாந்தங்களையும் தீவிரவாதத்தையும் முறியடித்த பிரித்தானிய ஆணையர் என அறியப்படுகிறார்.. அவர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். மலாயாவில் பொதுவுடைமை ஆதரவாளர்களை அழித்தே தீருவேன் என்று உறுதிபூண்டு போராடியவர் என்றும் அறியப்படுகிறார்.[1][2]