![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/Herma_of_Aeschylus%252C_Klas08.jpg/640px-Herma_of_Aeschylus%252C_Klas08.jpg&w=640&q=50)
எசுக்கிலசு
பண்டைய கிரேக்க துன்பியல் நடக ஆசிரியர் / From Wikipedia, the free encyclopedia
எசுக்கிலசு (Aeschylus, அண். 525/524 - அண். கிமு 456/455 ) என்பவர் ஒரு பண்டைய கிரேக்க கவிஞர், நாடக ஆசிரியர் ஆவார். இவர் பெரும்பாலும் துன்பியல் நாடத்தின் தந்தை என்று விவரிக்கப்படுகிறார். [1] [2] இவரது எஞ்சியிருக்கும் நாடகங்களைப் படிப்பதன் மூலம் முந்தைய கிரேக்க துன்பியல் நாடகங்களைப் பற்றிய புரிதல் கிடைக்கிறது. [3] அரிசுடாட்டிலின் கூற்றுப்படி, இவர் நடக அரங்கில் உள்ள கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தினார் மேலும் அந்த பாத்திரங்களுக்குள்ளே சிக்கல்களை உருவாக்கினார். [nb 1]
எசுக்கிலசு | |
---|---|
![]() கிமு 30, இது கிமு 340-320 காலக்கட்டத்திய கிரேக்க எசுக்கிலசு எர்ம் சிற்பத்தை அடிபடையாக கொண்ட அதன் நகலான கிமு. 30 ஐச் சேர்ந்த உரோமானிய பளிங்கு எர்ம் (சிற்பம்)எர்ம் சிற்பம். | |
தாய்மொழியில் பெயர் | Αἰσχύλος |
பிறப்பு | அண். கிமு 525/524 எலியூசிஸ் |
இறப்பு | அண். கிமு 456 (சுமார் 67 வயதில்) Gela |
பணி | நாடக ஆசிரியர், போர் வீரர் |
பெற்றோர் | Euphorion (தந்தை) |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் |
|
இவர் எழுபது முதல் தொண்ணூறு வரையிலான நாடகங்களை எழுதியதாக அறியப்படுகிறது. அவற்றில் ஏழு மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவற்றில் ஒன்றான பிரோமிதியஸ் படைப்புரிமை குறித்து நீண்டகால விவாதம் உள்ளது, சில அறிஞர்கள் இது இவரது மகன் யூபோரியனின் படைப்பாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். மற்ற நாடகங்களின் துணுக்குகள் நூல்களில் உள்ள மேற்கோள்களில் தப்பிப்பிழைத்துள்ளன. மேலும் எகிப்திய பாபிரசில் இன்னும் சிலபகுதிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. இந்த துண்டுகள் பெரும்பாலும் எசுக்கிலசுவின் படைப்பு பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கின்றன. [4] நாடகங்களை முத்தொகுப்பாக (மூன்று பாகங்களாக) வழங்கிய முதல் நாடக ஆசிரியராக இவர் இருக்கலாம். இவரது ஒரெஸ்டியா முத்தொகுப்பு நாடகம் மட்டுமே தற்போதுள்ள பண்டைய எடுத்துகாட்டு. [5] கிரேக்கத்தின் மீதான பாரசீகர்களின் இரண்டாவது படையெடுப்பானது (கிமு 480-479) இவரது நாடகங்களில் குறைந்தது ஒன்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படைப்பு, தி பெர்சியன்ஸ், சமகால நிகழ்வுகள் தொடர்பான மிக சில செவ்வியல் கிரேக்க துன்பியல் நாடகங்களிலில் தற்போதுள்ள ஒரே ஒரு படைப்பு ஆகும். [6]