எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்
பழங்கால எகிப்தின் காலகட்டம் / From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் (Third Intermediate Period of Egypt) (கிமு 1069 – கிமு 664) புது எகிப்திய இராச்சியத்திற்கும் (கிமு 1550 – 1077), பிந்தைய எகிப்திய இராச்சியத்திற்கும் (கிமு 664 - கிமு 332) இடைப்பட்ட காலத்தில் கிமு 1069 முதல் கிமு 664 முடிய நிலவிய எகிப்தியர் அல்லாத நூபியர், மெசொப்பொத்தேமியா போன்ற வெளிநாட்டவர்கள் எகிப்தை ஆண்ட நிலையற்ற ஆட்சிக் காலமாகும்[1] [2]
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் கிமு 1069 - கிமு 664 | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1069 – கிமு 664 | |||||||||
தலைநகரம் |
| ||||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பார்வோன் | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கிமு 1069 | ||||||||
• முடிவு | கிமு 664 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் முடிவில் நிறுவப்பட்ட புது எகிப்திய இராச்சியத்தின் பார்வோன் பதினொன்றாம் இராமேசியம் கிமு 1070-இல் [3] இறந்த பின்னர் புது எகிப்து இராச்சியம் வீழ்ச்சி காணத் துவங்கிய போது, எகிப்தில் அரசியல் நிலையின்மையால் பண்டைய எகிப்தை கிமு 1069 முதல் கிமு 664 முடிய வெளிநாட்டவர்கள் குறிப்பாக நூபியா, மெசொப்பொத்தேமியா மக்களின் மூன்றாம் இடைநிலைக் கால ஆட்சி நிலவியது.
மூன்றாம் இடைநிலைக் காலத்திற்கு பின்னர் கிமு 664 முதல் கிமு 332 முடிய பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தினர் ஆட்சி செய்தனர். பின்னர் எகிப்தை கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்டது.