உருளைக் கிழங்கு
From Wikipedia, the free encyclopedia
உருளைக் கிழங்கு (potato) சோலானம் டியூபரோசம் (solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது[1] அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு[2] ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது.[3] ஆண்டீய மலைப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. ஒரே பள்ளத்தாக்கிலும் கூட 100 வகையான உருளைக்கிழங்குகள் விளைகின்றன.[4].
உருளைக்கிழங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மக்னோலியோப்சிடீ |
துணைவகுப்பு: | ஆசிட்டெரிடீ (Asteridae) |
வரிசை: | சோலானேலெசு (Solanales) |
குடும்பம்: | உருளைக் கிழங்கு குடும்பம் (Solanaceae) |
பேரினம்: | சோலானம் (Solanum) |
இனம்: | சோ. டியூபரோசம் 'S. tuberosum' |
இருசொற் பெயரீடு | |
சோலானம் டியூபரோசம் Solanum tuberosum லின்னேயசு | |
முதலில் பெரு நாட்டில் தொடங்கி இருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு-நடுப் பகுதிகளில் இருந்து வந்த வகையே ஆகும். ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தப்பட்டபின் உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாறியது. ஆனால் உருளைக்கிழங்கில் பல வகைகள் இல்லாமல் ஒரே வகை பயிரிடப்பட்டதால் நோயால் தாக்குண்டது. 1845 இல் பூஞ்சைக் காளான் போன்ற, மெல்லிழைகள் நிறைந்த, ஒற்றை உயிரணு உயிரினமாகிய ஃவைட்டோஃவ்த்தோரா இன்ஃவெசுடான்சு (Phytophthora infestans) என்னும் ஒன்றால் ஏற்படும் ஒரு கொள்ளை நோயால் பெரிய அளவில் உருளைக்கிழங்கு பயிர்கள் தாக்குற்றுப் பரவி, மேற்கு அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட நேர்ந்தது[2]சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும்[3] இந்தியா இரண்டாம்[5] இடத்திலும் உள்ளன.