![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/1979_Iranian_Revolution.jpg/640px-1979_Iranian_Revolution.jpg&w=640&q=50)
ஈரானியப் புரட்சி
From Wikipedia, the free encyclopedia
ஈரானிய புரட்சி (பாரசீகம்: انقلاب اسلامی, Enghelābe Eslāmi or انقلاب بیست و دو بهمن) என்பது ஈரானின் இசுலாமிய புரட்சி என்றும் 1979 புரட்சி [4][5][6][7][8][9] என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவு பலவீ அரசமரபின் அரசர் முகமது ரிசா சா பலவீ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு இசுலாமிய குடியரசு அயத்தோலா கோமெய்னி தலைமையில் அமைந்ததை இந்நிகழ்வு குறிக்கிறது. இப்புரட்சிக்கு இடதுசாரி அமைப்புகளும் இசுலாமிய அமைப்புகளும்[10] ஈரானிய மாணவர் இயக்கமும் துணைபுரிந்தன. புரட்சியின் தொடக்கத்தில் சா அரசைக் காப்பாற்ற சோவியத் ஒன்றியம் முயன்றாலும் இசுலாமிய குடியரசைச் சோவியத் ஒன்றியம் உடனடியாக ஏற்றுக்கொண்டது.[11]
ஈரானியப் புரட்சி Iranian Revolution "Enqelābe Esteqlāl wa zādi" | |
---|---|
![]() 1979ல் தெக்ரானில் போராட்டக்காரர்கள் | |
தேதி | சனவரி 1978 - பிப்ரவரி 1979 |
அமைவிடம் | ஈரான் |
காரணம் |
|
இலக்குகள் | பஃலாவி அரசகுலத்தை வீழ்த்துதல் |
முறைகள் |
|
முடிவு |
|
தரப்புகள் | |
வழிநடத்தியோர் | |
| |
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |
532[1]-2,781 பேர் 1978–79 வரையான காலப்பகுதியில் எதிர்ப்பு ஊர்வலத்தில் கொல்லப்பட்டனர்[2][3] |
சா அரசுக்கு எதிரான போராட்டங்கள் அக்டோபர் 1977ல் ஆரம்பித்தன, அது பின்னர் சமயம் சார்ந்த போராட்டமாக மாறியது. சனவரி 1978ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. 1978 ஆகத்து மற்றும் திசம்பருக்குள் இப்போராட்டத்தால் நாடு முடங்கியது. 1979 சனவரி 16 அன்று தன் கடமைகளைப் பிரதமரிடம் ஒப்படைத்து விட்டு மன்னர் சா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். அயத்தோலா கோமெய்னி அரசு அமைக்க அழைக்கப்பட்டார். அவர் தெக்ரான் திரும்பியபோது அவரைப் பல மில்லியன் ஈரானியர்கள் வரவேற்றனர்.[12][13] பிப்ரவரி 11 அன்று மன்னரின் படைகளைப் புரட்சிப்படைகள் முழுவதுமாகத் தோற்கடிக்கத்ததும் மன்னர் ஆட்சி முழுவதுமாகக் குலைந்தது. கோமெய்னி அதிகாரபூர்வமாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.[14][15][16] தேசிய வாக்கெடுப்பு மூலம் ஈரானியர்கள் ஈரானை இசுலாமிய குடியரசாக ஏற்றனர். ஏப்பிரல் 1, 1979 அன்று அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1979 திசம்பரில் புதிய அரசிலமைப்பு சட்டமும் ஏற்கப்பட்டது. இதில் அயத்தோலா கோமெய்னி நாட்டின் உயரிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இப்புரட்சி உலகுக்கு பெரும் வியப்பை தந்தது[17]. புரட்சிக்குத் தேவையானவையெனக் கருதப்படும் பொருளாதார நெருக்கடி, அடித்தட்டு மக்களின் புரட்சி, போரில் தோல்வி, கட்டுப்படாத இராணுவம் போன்ற காரணங்கள் இப்புரட்சிக்கு தேவைப்படாததே இதற்கு காரணம்[18] புரட்சி நடந்த சமயம் இங்கு ஒப்பீட்டளவில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருந்ததும், மக்கள் விரும்புவது விரைவாகக் கிடைத்ததும், பல ஈரானியர்கள் புரட்சிக்குப் பின் வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்ததற்கு காரணம்.[19][20] இப்புரட்சி மேற்குலக சார்பு மன்னராட்சியை நீக்கிவிட்டு மேற்குலக எதிர்ப்புக் கொண்ட இசுலாமிய ஆதிக்க் கொள்கை உடையதாக மாறியது [21][22] . இப்புரட்சி ஒப்பீட்டளவில் வன்முறையற்றதாக இருந்தது. இது தற்கால புரட்சிகளுக்குப் புதிய வரையறையை அளித்தது (இப்புரட்சி நடந்த பின் வன்முறை இருந்தது.)[23]