இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977
From Wikipedia, the free encyclopedia
1977 தமிழர் இனப்படுகொலைகள் அல்லது 1977 தமிழருக்கு எதிரான கலவரம் (1977 anti-Tamil pogrom in Sri Lanka)[1][2][3] என்பது இலங்கையில் 1977 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் ஆகும். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ்த் தேசியவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தம்ழிப் பகுதிகளில் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து பெரு வெற்றி பெற்றதை அடுத்து, தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்த வன்முறைகள் இடம்பெற்றன. அனுராதபுரம், கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதில் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டதாக அரச விசாரணை தெரிவித்தது. ஆனாலும் இத்தொகை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.[4] ஆயிரக்கணக்கானோர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அன்றைய ஆட்சியில் இருந்த ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான இலங்கை அரசின் ஆதரவோடு இந்தக் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன.
1977 இல் இலங்கையில் தமிழருக்கு எதிரான கலவரம் | |
---|---|
![]() இலங்கையின் அமைவிடம் | |
இடம் | இலங்கை |
நாள் | ஆகத்து 12 முதல் 20, 1977 (+6 கிஇநே) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைத் தமிழர்களும், சில சிங்கள பொதுமக்கள் |
தாக்குதல் வகை | தலை கொய்தல், எரிப்பு, கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு |
ஆயுதம் | கத்திகள், பொல்லுகள், தீ, துப்பாக்கிகள் |
இறப்பு(கள்) | 300 |
காயமடைந்தோர் | 1000+ |