From Wikipedia, the free encyclopedia
இராதா கிருஷ்ணன் (Radha Krishna) (IAST rādhā-kṛṣṇa, சமஸ்கிருதம் राधा कृष्ण), இந்து சமயத்தில், குறிப்பாக வைணவ சமயப் பிரிவில் ஆண்பால் மற்றும் பெண்பால் இணைந்த தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. வைணவ மரபில் சுயம்பகவானாக விளங்கும் கிருஷ்ணரை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாகவும் கருதப்படுகிறது. கிருஷ்ணருடன், இராதை தெய்வமாக கருதப்படுகிறார்.[1][2]
இராதா கிருஷ்ணன் | |
---|---|
தேவநாகரி | राधा कृष्ण |
சமசுகிருதம் | rādhā-kṛṣṇa |
வகை | கிருஷ்ணன் திருமாலின் எட்டாவது அவதாரம் |
இடம் | பிருந்தாவனம் |
துணை | ராதை |
பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண பக்தரான ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற நூலில், கிருஷ்ண பக்தையான இராதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையே மலர்ந்த தெய்வீகக் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.[3] பிருந்தாவனத்தில் அனைத்து கோபியர்கள் புடைசூழ இராதையுடன், இரவு நேரங்களில் கிருஷணர் ராசலீலை விளையாட்டு ஆடுவது வழக்கம்.[4]
வட இந்தியக் கோயில்களில், குறிப்பாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க கோயில்களில் இராதா - கிருஷ்ணரை மூலவராக வைத்து வழிபடும் மரபு உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.