இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம், (Security Printing and Minting Corporation of India Limited) (SPMCIL) என்பது இந்திய அரசின் நிறுவனமாகும். மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் செயல்படும் இந்நிறுவனம் பணத் தாள்கள், வங்கி பண முறி தாள்கள் (bank notes), நாணயங்கள், நீதிமன்ற சார்பற்ற வில்லை, அஞ்சல் வில்லைகள் மற்றும் அரசு சார்பான ஆவணத் தாள்களை அச்சிடுகிறது.[1]இந்திய அரசின் நிதித் துறையின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. நான்கு காகித அச்சகங்களும், நான்கு நாணயச்சாலைகளும், ஒரு காகித ஆலைகளும் கூடிய ஒன்பது அலகுகளை இக்கழகம் கொண்டுள்ளது. [2]