இந்திய நினைவு நாணயங்கள்
From Wikipedia, the free encyclopedia
இந்திய நினைவு நாணயங்கள் (ஆங்கில மொழி: Commemorative coins of India) என்பது சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களின் நினைவாக இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் நாணயங்கள் ஆகும். இந்திய நினைவு நாணயங்கள் 1964 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் வெளியாயின. இதுவே முதலாவது இந்திய நினைவு நாணயமாகும். இத்தகைய நாணயங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலோ அல்லது வழக்கமான வடிவமைப்பிலோ வெளியிடப்படுகின்றன. முக்கியமான நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக வழங்கப்படும் இவை இந்திய சுதந்திர போராட்டம், போர், சமாதானம், வனவிலங்குகள், தாவரங்கள், முக்கிய நபர்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் நினைவாக வழங்கப்படுகின்றன. இந்நாணயங்கள், 5, 10, 20, 25, 50 பைசாக்களிலும், 1, 2, 5, 10, 50, 75, 100, 125, 1000 உள்ளிட்ட பல்வேறு விதமான ரூபாய் மதிப்புகளிலும் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் அதிகபட்சமாக ₹1000 மதிப்புடைய நாணயம் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டி 1000 ஆண்டுகள் கடந்ததை நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.[1]