இடைக்கால திரிபுக் கொள்கை விசாரணை
From Wikipedia, the free encyclopedia
இடைக்கால விசாரணை என்பது கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான சமயப் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவர்களை கண்டறிந்து திரிபுக் கொள்கை விசாரணை அமைப்புகளால் விசாரணை நடத்தி தண்டிக்கப்படுவது அல்லது நாடு கடத்துவது ஆகும். முதல் திரிபுக் கொள்கை விசாரணையான எபிஸ்கோபல் விசாரணை (1184-1230) மற்றும் பின்னர் பாப்பல் விசாரணை (1230களில்) உட்பட 1184ஆம் ஆண்டிலிருந்து நடைபெறு ஒரு தொடர் விசாரணைகள் ஆகும். ரோமன் கத்தோலிக்கத்திற்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் இயக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடைக்கால விசாரணை நிறுவப்பட்டது. குறிப்பாக தெற்கு பிரான்ஸ் மற்றும் வடக்கு இத்தாலியில் உள்ள கேத்தரிசம் மற்றும் வால்டென்சியர்கள் இயக்கங்கள் மீது இடைக்கால திரிபுக் கொள்கை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட்டது.
இதற்கு முன் பீட்டர் ஆஃப் ப்ரூயிஸ் போன்ற தனிப்பட்ட மனிதர்கள் அடிக்கடி திருச்சபைக்கு எதிராக சவால் விடுத்தனர். இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் முதல் வெகுஜன அமைப்பாக கேத்தரிச இயக்கத்தினர் திருச்சபையின் அதிகாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இது ஆரம்பகால திரிபுக் கொள்கை விசாரணைகளை ஆராய்வது. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் கத்தோலிக்கத் திருச்சபை, எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை (1478-1834), போர்த்துகீசிய திரிபுக் கொள்கை விசாரணை (1536-1821) மற்றும் உரோமைக் குற்ற விசாரணைகள் (1542-1650) நடத்தியது.