ஆவடி
இது தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
ஆவடி (Avadi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னை மாநகருக்கு வடமேற்கில் அமைந்துள்ளது; மற்றும் இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சியாகும்.[3] ஆவடி மாநகராட்சி தன்னகத்தே கொண்டுள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் 'மாசிலாமணீஸ்வரர் கோயில்' (சிவாலயம்) உள்ளது. ஆவடி மாநகரில், கன ஊர்தி தொழிற்சாலை, போர் ஊர்தி தொழிற்சாலை வாரியம், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை அமைந்துள்ளன. சென்னையின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளில், அதிக மக்கள் தொகை மற்றும் வளர்ந்த பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். ஆவடியில் உள்ள ஏரி 'பாலேரிப்பட்டு' என்று அழைக்கப்பட்டது; இது இப்போது மிகவும் பழைய நில ஆவணங்களில் மட்டுமே காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஆவடி, நாடு ...
ஆவடி | |
---|---|
மாநகராட்சி | |
ஆள்கூறுகள்: 13.106700°N 80.097000°E / 13.106700; 80.097000 | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | திருவள்ளூர் |
புறநகர் | சென்னை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | ஆவடி மாநகராட்சி |
• ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 65 km2 (25 sq mi) |
ஏற்றம் | 55 m (180 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,45,996 |
• அடர்த்தி | 5,300/km2 (14,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | "600 054, 600 055, 600 062, 600 065, 600 071, 600 072, 602 024" |
வாகனப் பதிவு | TN 12 |
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
சட்டமன்றத் தொகுதி | ஆவடி |
மூடு