இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
ஆம் ஆத்மி கட்சி (ஆங்கிலம்: Aam Aadmi Party; தேவநாகரி: आम आदमी पार्टी; மொ.பெ. சாதாரண மனிதனின் கட்சி; சுருக்கம் ஆ.ஆ.க.) 2012 இல் ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும். இது, சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 26 நவம்பர் 2012ல் தில்லியில் தொடங்கப்பட்டது.[22][23]
ஆம் ஆத்மி கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | AAP |
தலைவர் | அரவிந்த் கெஜ்ரிவால் (தில்லி முதல்வர்) |
நிறுவனர் | அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் |
மாநிலங்களவைத் தலைவர் | சஞ்சய் சிங் |
தொடக்கம் | 26 நவம்பர் 2012 |
தலைமையகம் | 206, ரௌஸ் அவென்யூ, தீன் தயாள் உபாத்யாய் மார்க், ஐடிஓ, புது தில்லி, இந்தியா-110002[1] |
மாணவர் அமைப்பு | சத்ர யுவ சங்கர்ஷ் சமிதி (CYSS)[2] |
இளைஞர் அமைப்பு | ஆம் ஆத்மி கட்சி இளைஞர் பிரிவு (AYW)[3] |
பெண்கள் அமைப்பு | ஆம் ஆத்மி கட்சி மகிளா சக்தி(AMS)[4] |
தொழிலாளர் அமைப்பு | ஷ்ராமிக் விகாஸ் சங்கதன் (SVS)[5][6][7][8] |
உறுப்பினர் | 10.05 மில்லியன் (2014)[9][needs update] |
கொள்கை | சமூக தாராளமயம்[10][11][12] ஜனரஞ்சகவாதம்[13] ஊழல் எதிர்ப்பு[14] மதச்சார்பின்மை[15] தேசியவாதம்[16][17][18] மனிதநேயம்[19] |
அரசியல் நிலைப்பாடு | மையம் முதல்[20] மத்திய-இடது[12][21] வரை |
நிறங்கள் | நீலம் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி (தில்லி, பஞ்சாப் & கோவா) |
தேசியக் கூட்டுநர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 10 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவைகள்) | 157 / 4,036 பட்டியல் 92 / 117 (பஞ்சாப் சட்டமன்றம்)
62 / 70 (தில்லி சட்டமன்றம்)
2 / 40 (கோவா சட்டமன்றம்)
1 / 182 (குசராத்து சட்டமன்றம்)
|
தேர்தல் சின்னம் | |
துடைப்பம் | |
இணையதளம் | |
aamaadmiparty | |
இந்தியா அரசியல் |
ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார்.
இந்தக் கட்சி உருவாகியது முதல், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது. கற்பழிப்பிற்கு எதிரான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி, கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது.[24][25][26]
2013 தில்லி சட்ட பேரவை தேர்தலில் அறிமுகமான இந்தக் கட்சி தில்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி இக்கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்றது.[27].
ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது, இந்திய தேர்தலில் குறைந்தது மூன்று சதவிகித இடங்களை கைப்பற்றும் அல்லது மொத்த வாக்குகளில் குறைந்தது 6 சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும். அதன்படி தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், தேர்தலில் போட்டியிட பயன்படுத்திய துடைப்பம் சின்னத்தையே, கட்சி சின்னமாக அங்கீகரித்தது. 2014 மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இடங்களில் வென்றதால் அங்கும் இக்கட்சிக்கு மாநில கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. [28]
தில்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இக்கட்சி 28 இடங்களில் வென்றது. 8 இடங்களில் வென்ற காங்கிரசு வெளியில் இருந்து ஆதரிப்பதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் சொன்னதால்[29][30] இக்கட்சி ஆட்சி அமைக்கிறது. புது தில்லி தொகுதியில் வென்ற அரவிந்த் கெஜ்ரிவால் டிசம்பர் 28, 2013 அன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் [31].[32] இக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வினோத் குமார் பின்னி தனது ஆதரவை விலக்கிக்கொண்டார். [33][34] ஜன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி இக்கட்சியின் முதல்வர் கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் பதவி விலகினர்[35][36]
2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தில்லியின் 67 தொகுதிகளில் இக்கட்சி வெற்றி பெற்றது. மீதி மூன்று இடங்களை பாஜக பெற்றது.
2020 ஆன் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62 தொகுதிகளில் இக்கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மீதி 8 தொகுதிகளை பாஜக வென்றது.[37]
2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலில் இக்கட்சி நாட்டின் பல பகுதிகளில் போட்டியிட்டாலும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நான்கு இடங்களில் வென்றது.
இந்தியா முழுவதும் 2.5 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ள இக்கட்சியில், தமிழகத்தில் புதிதாக 30 ஆயிரம் பேர் சேர்ந்தனர்.[38] மொத்தமாக தமிழகத்திலிருந்து இதுவரை 42,000 பேர் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.[39] ஆம் ஆத்மி கட்சி என்று வழங்கப்பட்டு வந்ததை, தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் சு. ப. உதயகுமார் இதனை தமிழில் எளிய மக்கள் கட்சி என பெயர் மாற்றி அழைத்தார்.[40]
ஆம் ஆத்மி கட்சி தான் பதவி வகித்த 49 நாட்களில், ஊழலுக்கு எதிரான பல பணிகளை செய்து முடித்தது.[41]
இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு, சுமார் "பதினாறு லட்சம் மக்கள்" இதுவரை ஆதரவு தெரிவித்தனர்.[42]
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றியும் அக்கட்சியின் வளர்ச்சிப் பற்றியும் குஷ்பு ரங்கா மற்றும் வினை சுக்லா இயக்கத்தில் ஆனந்த் காந்தி தயாரிப்பில், வைஸ் (Vice) செய்தி நிறுவனம் An Insignificant Man என்ற முழுநீள ஆவணப்படத்தை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 19 தேதி அன்று வெளியிட்டது.[43]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.