ஆந்திரப் பிரதேச வரலாறு
From Wikipedia, the free encyclopedia
ஆந்திரப் பிரதேசம் என்பது இந்தியாவின் 29 வது மாநிலமாகும். இதன் வரலாற்றுக் குறிப்புகள் வேதகாலத்தில் இருந்து துவங்குகிறது. மேலும் இது குறித்து பொ.ஊ.மு. 800 காலகட்டத்தைச் சேர்ந்த சமஸ்கிருத நூலான அய்தரேய பிராமணாவில் காணப்படுகிறது.[1][2][3] அஸ்மகம் மகாஜனபதம் (பொ.ஊ.மு. 700–300) என்பது கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்த பழங்கால அரசுகளாகும்.[4] இப்பகுதி மக்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இராமாயணம், மகாபாரதம், மற்றும் புராணங்களில் கூறப்படுகிறது.