ஆதவன் (எழுத்தாளர்)
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆதவன் (Aadhavan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் இவர் பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.[1] [2][3][4][5]
விரைவான உண்மைகள் ஆதவன்Aadhavan, பிறப்பு ...
ஆதவன் Aadhavan | |
---|---|
![]() | |
பிறப்பு | கே.எசு.சுந்தரம் (1942-03-21)21 மார்ச்சு 1942 கல்லிடைக்குறிச்சி, தமிழ்நாடு |
இறப்பு | 19 சூலை 1987(1987-07-19) (அகவை 45) சிருங்கேரி, கருநாடகம் |
தொழில் | எழுத்தாளர்,உதவி ஆசிரியர் |
மொழி | Tamil |
தேசியம் | இந்தியர் |
காலம் | 1987 வரை |
வகை | நாவல்கள்,சிறுகதைகள் |
கருப்பொருள் | குழந்தை இலக்கியம்,சமூக நாவல்கள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | என் பெயர் ராமசேசன் காகித மலர்கள் முதலில் இரவு வரும் |
துணைவர் | ஏமா சுந்தரம் |
பிள்ளைகள் | சாருமதி நீரசா |
மூடு