![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ac/Cesarian_the_moment_of_birth3.jpg/640px-Cesarian_the_moment_of_birth3.jpg&w=640&q=50)
அறுவைசிகிச்சை மகப்பேறு
From Wikipedia, the free encyclopedia
அறுவைசிகிச்சை மகப்பேறு என்பது அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரசவிக்கும் ஒரு மருத்துவ முறை ஆகும்.[2] பொதுவாக ஒரு அறுவைசிகிச்சை பிரசவம் தாய் மற்றும் சேயின் உடல் நிலை சரியாக இல்லாத போதோ அல்லது சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லாத போதோ இம்முறை தேர்வு செய்யப்படுகிறது.[2] தாய்க்கு வலிமிகு மகப்பேறு, இரட்டையர், உயர் இரத்த அழுத்தம், குழந்தை திரும்பி இருத்தல், தொப்புள்கொடி மற்றும் சூல்வித்தகம் குறைபாடு முதலிய மருத்துவ காரணங்களால் இம்முறை மக்கட்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது.[2][3] அறுவைசிகிச்சை பிரசவ முறை தாயின் இடுப்பு பகுதியின் வடிவம் மற்றும் மருத்துவ காரணிகளால் இதன் வகையை தேர்வு செய்வர்.[2][3] அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின் அடுத்த பிரசவம் சுகபிரசவமாக அமைய வாய்ப்புகள் இருக்கலாம்.[2] உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துவது என்னவென்றால் சரியான மருத்துவ காரணங்கள் இருந்தால் மட்டுமே இந்த அறுவைசிகிச்சை பிரசவ முறையை மேற்கொள்ளவேண்டம் என்பதாகும்.[3][4] ஆயினும் தாயின் வேண்டுகோளின் படி எந்த ஒரு மருத்துவ காரணங்கள் இல்லாத போதும் வலுமிகு பிரசவத்தை தவிர்க்க இந்த அறுவைசிகிச்சை பிரசவ முறை மேற்கொள்ளப்படுகிறது.[2]
அறுவைசிகிச்சை மகப்பேறு | |
---|---|
![]() ஒரு மருத்துவ குழு அறுவைசிகிச்சை பிரசவத்தில் ஈடுபடும்போது [1] | |
ICD-10-PCS | 10D00Z0 |
ICD-9-CM | 74 |
MeSH | D002585 |
மெட்லைன்பிளஸ் | 002911 |
பொதுவாக இந்த அறுவைசிகிச்சை பிரசவ முறை 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடக்கும்.[2] இது தண்டுவட அல்லது பொது மயக்கவியல் மருந்துகளின் உதவியால் நடைபெறுகிறது.[2] சிறுநீர் வெளியேற்றும் குழாய் மூலம் சிறுநீர்ப்பை காலியக்கப்படுகிறது மேலும் அடி வயிற்றின் தோல்கள் கிருமி தொற்று தடுப்பான் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.[2] ஆறு அங்குல அளவிற்கு தாயின் அடிவயிற்றில் அறுவைசிகிச்சை செய்யப்படும்.[2] கருப்பையை அதே போல அறுவைசிகிச்சை மூலம் திறந்து குழந்தையை வெளியில் எடுத்து பிரசவிக்கின்றனர்.[2] பின் அறுவைசிகிச்சை மேற்கொண்ட கருப்பை பகுதிகள் மற்றும் அடிவயிற்று பகுதிகள் தையலிடப்படுகிறது.[2] அறுவைசிகிச்சை அரங்கில் இருந்து வெளியே வந்து தாய் தன் மயக்க நிலை மீண்டவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.[5] பொதுவாக தாய் உடல் நிலை தேறி மருத்துவமனையிருந்து வீட்டிற்கு செல்ல பல நாட்கள் ஆகலாம்.[2]
அறுவைசிகிச்சை பிரசவம் சிறு மருத்துவ காரணங்களில் செய்ய அவசியம் இல்லை. ஏன் என்றால் அறுவை சிகிச்சை என்பது பல பக்கவிளைவுகளை கொண்டது.[3] சுகபிரசவத்தை விட அதிக நாட்கள் தாய் குணமடைய தேவைப்படுகிறது சுமார் ஆறு வாரம் ஆகலாம்.[2] குழந்தைக்கு சுவாசக்கோளாறும் தாய்க்கு அதிகப்படியான பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.[3] விரிவான மேற்கோளின் படி 39 வார கருக்காலம் முன்னதாக அறுவைசிகிச்சை பிரசவ முறை மேற்கொள்ளக்கூடாது.[6] இந்த பிரதவ முறையால் இனப்பெருக்க மண்டலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.[7]
உலகளவில் 2012 ஆம் ஆண்டு சுமார் 23 மில்லியன் நபருக்கு அறுவைசிகிச்சை பிரசவம் நடைபெற்றது.[8] சர்வதேச ஆரோக்கிய முகமை பெண்களில் 10% முதல் 15% வரை இந்த பிரசவ முறைக்கு உகந்தவர்களாக உள்ளனர் என கருதுகிறது.[4] சில சான்றுகள் 19% என்ற உயர்ந்த அளவு பெண்கள் இந்த பிரசவ முறையில் நல்ல ஆரோக்கியம் அடைந்துள்ளனர் என கூறுகிறது.[8] உலக நாடுகளில் 45 நாடுகளுக்கு மேல் இந்த பிரசவ முறை 7.5% அளவுக்கும் கீல் உள்ளது. ஆனால் 50 நாடுகளுக்கு மேல் இதன் அளவு 27% அளவுக்கும் மேல் உள்ளது.[8] தாய் சேய் இருவரின் நலனில் அக்கறை கொண்டும் அறுவைசிகிச்சை பிரசவ முறையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.[8] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசவங்களில் 32% அளவு அறுவைசிகிச்சை பிரசவமுறை ஆகும்.[9] இந்த பிரசவ முறை கிருத்து பிறப்பதற்கு முன்பே 715 ஆம் ஆண்டிலேயே நடைபெற்றதாக குறிப்பு உள்ளது. இதில் குழந்தை நல்ல முறையில் பிறந்தும், தாய் இறந்தும் உள்ளார்.[10] தாயும் அறுவைசிகிச்சைக்கு பின் பிழைத்தல் என்பது 1500 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து வருகிறது.[10] 19 ஆம் நற்றாண்டிலிருந்து மயக்க மருந்து, கிருமி நாசினி மற்றும் கிருமி தொற்று தடுப்பான் வருகையால் இம்முறை பிரசவத்தில் தாய் சேய் இறப்பு தவிர்க்கப்படுகிறது.[10]