அன்னை பூபதி
From Wikipedia, the free encyclopedia
அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 - ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்.
விரைவான உண்மைகள்
அன்னை பூபதி பூபதி கணபதிப்பிள்ளை | ||
![]() | ||
அமைப்பு | மட்டக்களப்பு-அம்பாறை அன்னையர் முன்னணி | |
பிறப்பு | நவம்பர் 3, 1932 | |
பிறந்த இடம் | மட்டக்களப்பு, ![]() | |
நோன்பு ஆரம்பம் | மார்ச் 19, 1988 | |
இறப்பு | ஏப்ரல் 19, 1988 (அகவை 56) | |
நோன்பிருந்த நாட்கள் | 31 |
மூடு
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன:
- உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
- புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.