அகத்தியமலை உயிரிக்கோளம்
இந்திய உயிர்க்கோளக் காப்பகம் / From Wikipedia, the free encyclopedia
அகத்தியமலை உயிரிக்கோளம்அல்லது அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் (ஆங்கிலம்:ABR = Agasthyamala Biosphere Reserve) 2001 ஆண்டு, 3,500.36 km2 (1,351.50 sq mi) பரப்பளவு கொண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இது யுனெஸ்கோவின் மனிதனும், உயிரிக்கோளமும் திட்டம் என்பதில் அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது. [1] மேலும் இது உலகப் பாரம்பரியக் களம் என்பதிலும் அறிவிக்கப்பட, முன்மொழியப்பட்டுள்ளது. [2] இப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அகத்தியமலை அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
அகத்தியமலை உயிரிக்கோளம் | |
---|---|
அமைவிடம் | கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கன்னியாகுமரி, திருநெல்வேலி |
அருகாமை நகரம் | திருவனந்தபுரம் |
பரப்பளவு | 3,500.36 km2 (1,351.50 sq mi) |
நிறுவப்பட்டது | 2001 |
நிருவாக அமைப்பு | Ministry of Environment & Forests கேரள வனத்துறை |
ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் உறுப்பினர்கள் கூட்டம், பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி, 2016 ஆண்டு நடைபெற்றது. இதில் உலக உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் புதிதாக 20 இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் பரந்து விரிந்துள்ள அகத்திய மலையும் இடம்பெற்றது. அகத்திய மலை உலக உயிர்க்கோள் காப்பகமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள நீலகிரி, மன்னார் வளைகுடா, சுந்தரவன காடுகள், நிகோபார் உள்ளிட்டவை யுனெஸ்கோவின் உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் ஏற்கெனவே இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.