From Wikipedia, the free encyclopedia
கொல்லிப்பாவை என்பது 1970 களில் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் ஆவார். இது நவீன இலக்கிய பண்பாட்டு விமர்சனங்களை வெளியிட்டது.
கொல்லிப்பாவையின் முதல் இதழ் 1976 அக்டோபரில் வெளியானது. இதழுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்து சொன்னவர் தருமு ஔரூப் சிவராம் என்று ராஜமார்த்தாண்டன் நன்றியுடன் அறிவித்தார். கொல்லிப்பாவை பெரிய அளவில், அதிகமான பக்கங்கள் கொண்ட ‘காலாண்டு ஏடு' ஆக வந்தது. முதல் இதழ் 52 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. இதன் ஒவ்வொரு இதழும் காலதாமதத்துக்காக வருத்தம் தெரிவித்தவாறு வந்தது. இவ்வாறு 1977இல் ஒரே ஒரு இதழைத்தான் வெளியிட முடிந்திருக்கிறது. இரண்டாவது ஆண்டு முதல், கொல்லிப்பாவை கன்னியாகுமரி மாவட்டம், இடையன் விளை என்ற ஊரிலிருந்து வெளி வரத்தொடங்கியது. கொல்லிப்பாவை 1981இல் ஒன்றோ இரண்டோ வெளிவந்தது. 1982 இல் இது வெளிவந்ததாகத் தெரியவில்லை.[1]
இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.