பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கானல் நீர் என்பது 1961 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பி. ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கினார். இது வரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கபட்டது. தெலுங்கில் பாடசாரி (பாதசாரி) என்ற பெயரில் வெளியானது. இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வங்க எழுத்தாளரான சரத்சந்திர சட்டோபாத்யாயாவின் புதினத்தின் திரைவடிவமாக எடுக்கப்பட்ட படி தீதி என்ற வங்க மொழி படத்தின் மறு ஆக்கமே இப்படமாகும். இதில் ஏ. நாகேஸ்வர ராவ், தேவிகா, பி. பானுமதி ஆகியோர் நடித்தனர். பாடசாரி 1961 சூன் 30 அன்றும், கானல்நீர் 1961 யூலை 22 அன்றும் வெளியானது. இரு பதிப்புகளும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.[1][2][3]
கானல் நீர் | |
---|---|
இயக்கம் | பி. ராமகிருஷ்ணா |
தயாரிப்பு | பி. ராமகிருஷ்ணா பரணி பிக்சர்ஸ் |
கதை | வலம்புரி சேமநாதன் (உரையாடல்) |
மூலக்கதை | படி தீதி படைத்தவர் சரத்சந்திர சட்டோபாத்யாயா |
இசை | மாஸ்டர் வேணு |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் தேவிகா பி. பானுமதி |
வெளியீடு | சூலை 21, 1961 |
ஓட்டம் | . |
நீளம் | 15183 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.