ஆழ்வார்குறிச்சி (ஆங்கிலம்:Alwarkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில்இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சிவசைசலத்தில் உள்ள சிவசைலம் கோயிலில் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்குத் தேர் திருவிழா நடைபெறுகிறது மேலும் தை பூசத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.[3]

விரைவான உண்மைகள்
ஆழ்வார்குறிச்சி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

10,043 (2011)

715/km2 (1,852/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.05 சதுர கிலோமீட்டர்கள் (5.42 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/alwarkurichi
மூடு

அமைவிடம்

இது திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கிமீ தொலைவிலும், தென்காசிக்கு தெற்கில் 23 கிமீ தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கிமீ தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி ஆகும்.[4]

பேரூராட்சியின் அமைப்பு

14.05 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 77 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 2793 வீடுகளும், 10,043 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]

கல்வி நிறுவனங்கள்

  • ஸ்ரீ பரமகல்யாணி கலைக் கல்லூரி

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.