44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு
சதுரங்கப் போட்டி / From Wikipedia, the free encyclopedia
44-ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44-th Chess Olympiad), சென்னை 2022 2022 சூலை 28 முதல் ஆகத்து 9 வரை இந்தியாவில், சென்னையில் நடைபெற்றது.[1][2][3] பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) இப்போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது. திறந்தநிலைப் போட்டிகளும்,[note 1][4] பெண்களுக்கான போட்டிகளும், சதுரங்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
44-ஆவது சதுரங்க ஒலிம்பியாடு 44th Chess Olympiad | |
---|---|
![]() 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாடின் சின்னம் | |
நடத்தும் நகரம் | சென்னை, இந்தியா |
போட்டியாளர்கள் | 937 (திறந்த) 800 (பெண்கள்) 1,737 (மொத்தம்) |
அணிகள் | 188 (திறந்த) 162 (பெண்கள்) |
நாடுகள் | 186 (திறந்த) 160 (பெண்கள்) |
தீவட்டிச் சுற்றைத் தொடக்கியவர் | விசுவநாதன் ஆனந்த் |
தொடக்க நிகழ்வு | 28 சூலை 2022 |
இறுதி நிகழ்வு | 9 ஆகத்து 2022 |
ஆரம்பித்தவர் | நரேந்திர மோதி |
கொப்பரை எரித்தவர் | குகேஷ், ர. பிரக்ஞானந்தா |
அரங்கம் | Four Points by Sheraton, மாமல்லபுரம் (அனைத்துப் போட்டிகளும்) நேரு அரங்கு (தொடக்க, இறுதி நிகழ்வுகள்) |
நிதிநிலை | ₹92 கோடி (US$12 மில்லியன்) |
திறந்த நிகழ்வு | 01 !![]() ![]() 02 ! ![]() ![]() 03 ! ![]() ![]() |
பெண்கள் | 01 !![]() ![]() 02 ! ![]() ![]() 03 ! ![]() ![]() |
திறந்த நிகழ்வு | ![]() |
பெண்கள் | ![]() |
கப்பிரிந்தாசுவிலி கிண்ணம் | ![]() |
முந்தையது | ←பத்தூமி 2018 |
அடுத்தது | புடாபெசுட்டு 2024→ |
இந்நிகழ்வு தொடக்கத்தில் உருசியாவில் காந்தி-மான்சீசுக்கு நகரில் இடம்பெறுவதாக இருந்து, பின்னர் மாஸ்கோவில் 2020 ஆகத்து மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.[5][6] இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.[7] பின்னர் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.[8] இதுவே இந்தியாவில் நடந்த முதலாவது சதுரங்க ஒலிம்பியாடு ஆகும்.[9]
பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,737 ஆகும், இதில் 937 பேர் திறந்தநிலையிலும், 800 பேர் பெண்கள் போட்டியிலும் கலந்து கொண்டனர்.[10][11] பதிவு செய்யப்பட்ட அணிகளின் எண்ணிக்கை 186 நாடுகளில் இருந்து 188 அணிகள் திறந்தநிலையிலும்,[12] 160 நாடுகளில் இருந்து 162 பெண்கள் அணிகளும் பங்குபற்றின.[13] சதுரங்க ஒலிம்பியாது சென்னையில் செரட்டனின் போர் பாயிண்ட்சு மாநாட்டு மையத்திலும், தொடக்க, நிறைவு விழாக்கள் சவகர்லால் நேரு அரங்கத்திலும் நடைபெற்றன.[14] இந்த நிகழ்வின் தலைமை நடுவர் பிரான்சின் லாரன்ட் பிரேட் ஆவார்.[15]
திறந்தநிலைப் போட்டிகளில் உசுபெக்கிசுத்தான் அணி தங்கப் பதக்கத்தை வென்றது, இது சதுரங்க ஒலிம்பியாடுகளில் அவர்களின் முதலாவது பதக்கமாகும், அதே நேரத்தில் பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கத்தை வென்றது. இது அவர்களது இரண்டாவது தங்கப் பதக்கமாகும் (முன்னர் 2006 இல் வென்றது). ஆங்கிலேய வீரர் டேவிட் ஹோவெல், திறந்த நிகழ்வில் 2898 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் சாத்தியமான 8 புள்ளிகளில் 7½ புள்ளிகளைப் பெற்று,[16] தனிப்பட்ட வீரருக்கான அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றார்.[17] போலந்து வீராங்கனை ஒலிவியா கியோல்பாசா, பெண்கள் நிகழ்வில் 2565 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் சாத்தியமான 11 புள்ளிகளில் 9½ புள்ளிகளைப் பெற்று,[18] தனிநபருக்கான அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றார்.[19]
இந்த ஒலிம்பியாடு போட்டிகளின் போது, 93வது பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் மாநாடும் நடந்தது, இதன்போது உருசியாவின் ஆர்க்காதி துவர்க்கோவிச் மாநாட்டின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், விசுவநாதன் ஆனந்த் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[20][21]