2020 ஏகியன் கடல் நிலநடுக்கம்
2020 ஆம் ஆண்டு பூகம்பம் / From Wikipedia, the free encyclopedia
2020 ஏகியன் கடல் நிலநடுக்கம் (2020 Aegean Sea earthquake) கிரேக்கத் தீவான சமோசுக்கு வடகிழக்கில் சுமார் 14 கி.மீ (8.7 மைல்) தொலைவில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று 7.0 ரிக்டர் அளவில் பதிவானது. இந்நிலநடுக்கத்தின் விளைவாகப் பல கட்டடங்கள் சேதமடைந்தன அல்லது இடிந்து விழுந்தன. கிரேக்கத்தின் கார்லோவாசியில் உள்ள கன்னி மரியாள் தேவாலயத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருக்கிய நகரமான இசுமீரில் பல கட்டடங்கள் சேதமடைந்தன, இரவில் மீட்பு முயற்சிகள் தொடர்ந்ததால் இரு நாடுகளிலும் அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடங்களில் தொடர்ந்து மேற்கோள்ளப்பட்டன.
அ.நி.அ. veLiyidda நிலநடுக்கத்தின் செறிவைக் காட்டும் வரைபடம் | |
நிலநடுக்க அளவு | 6.9 Mww[1] 7.0 Mww (USGS)[2] 6.6 Mww[3] |
---|---|
ஆழம் | 21.0 கிமீ (அ.நி.அ.)[2] 16.54 கிமீ (AFAD)[3] 11.8 கிமீ[4] |
வகை | சாதாரணம் |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | சாமோசு, கிரேக்கம், இசுமீர், துருக்கி |
அதிகபட்ச செறிவு | VIII (தீவிரம்) |
ஆழிப்பேரலை | ஆம் |
பின்னதிர்வுகள் | பல தடவைகள் (அதிக பட்சம் Mw 5.2) |
உயிரிழப்புகள் | கிரேக்கம்: 2 இறப்புகள், 19 பேர் காயம்[5] துருக்கி: 114 இறப்புகள், 1,035 பேர் காயம்[6] |
கிரேக்கத்தில் இருவர் உயிரிழந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.[7] துருக்கியில் 114 பேர் உயிரிழந்தனர்,[8] 1035 பேர் காயமடைந்தனர்.[9] இதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை இந்த நிகழ்வை 2020 ஆம் ஆண்டின் மிக மோசமான நிலநடுக்கமாக ஆக்கியுள்ளது.