2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவில் கொரோனாவைரசு தொற்று, 30 சனவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 27 செப்டம்பர், 2020 நிலவரப்படி 59,03,932 இதற்கு அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 48,49,584 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 93,379 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.[8] 14 மார்ச் 2020, அன்று கொரோனா வைரஸ் தொற்றை இந்திய அரசு, தேசிய பேரிடராக அறிவித்தது. 26 செப்டம்பர், 2020 நிலவரப்படி, இந்தியாவில் 7,12,57,836 மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020 கொரோனாவைரசுத் தொற்று | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் வரைபடம்
| |||||||
| |||||||
| |||||||
| |||||||
நோய் | கோவிட்-19 | ||||||
தீநுண்மி திரிபு | கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)[1] | ||||||
அமைவிடம் | இந்தியா | ||||||
முதல் தொற்று | ஊகான், ஊபேய், சீனா[2] | ||||||
நோயாளி சுழியம் | திருச்சூர், கேரளா[3] | ||||||
வந்தடைந்த நாள் | 30 சனவரி 2020 – தற்போது வரை (4 ஆண்டு-கள், 4 மாதம்-கள், 3 வாரம்-கள் and 3 நாள்-கள்)[4] | ||||||
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 3,37,66,707 [5][lower-roman 1] | ||||||
சிகிச்சை பெறுவோர் | 2,75,224[5] | ||||||
குணமடைந்த நோயாளிகள் | 3,30,43,144 [5][lower-roman 2] | ||||||
இறப்புகள் | 4,48,339 [5][lower-roman 3] | ||||||
இறப்பு விகிதம் | 1.33% | ||||||
பிராந்தியங்கள் | 28 மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றியப் பகுதிகள்[5] | ||||||
அதிகாரப்பூர்வ இணையதளம் | |||||||
www |
டெல்லி,[9] அரியானா,[10] கருநாடகா,[11] மகாராஷ்டிரா,[12] குசராத்து[13] மற்றும் உத்தரப்பிரதேசத்தில்,[14] ஆகிய மாநிலங்களில் இந்த தொற்றுநோய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்கள் பெரும்பாலானவை மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு தொடர்புடையவை என்பதால், இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தியுள்ளது.
22 மார்ச் 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோதியின் வேண்டுகோளின் பேரில் இந்தியா 14 மணி நேர தன்னார்வ பொது ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தது. வைரசால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களிலும், அனைத்து முக்கிய நகரங்களிலும் ஊரடங்கு அரசாங்கம் அமல்படுத்தியது.[15] மேலும், மார்ச் 24 அன்று, பிரதமர் 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை உத்தரவிட்டார், இது இந்தியாவின் மொத்த 130 கோடி மக்களையும் பாதித்தது.[16]