![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/Lords-Cricket-Ground-Pavilion-06-08-2017.jpg/640px-Lords-Cricket-Ground-Pavilion-06-08-2017.jpg&w=640&q=50)
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி
From Wikipedia, the free encyclopedia
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி (2019 Cricket World Cup Final) என்பது 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்க இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாகும். இது நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்குமிடையே நடைபெற்றது.
![]() லார்ட்சு மைதானம் | |||||||||
நிகழ்வு | 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
சிறப்பு நிறைவு: இங்கி. 15/0, நியூசி. 15/1 இங்கிலாந்து நான்குகள் எண்ணிக்கையால் வெற்றி | |||||||||
நாள் | 14 சூலை 2019 | ||||||||
அரங்கம் | லார்ட்சு, லண்டன் | ||||||||
நடுவர்கள் | குமார் தர்மசேன (இலங்.; கள நடுவர்) மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.; கள நடுவர்) ரொட் டக்கர் (ஆசி.; மூன்றாம் நடுவர்) அலீம் தர் (பாக்.; கூடுதல் நடுவர்) ரஞ்சன் மடுகல்ல (இலங்.; போட்டி கண்காளிப்பாளர்) | ||||||||
← 2015 2023 → |
இரு அணிகளும் தலா 241 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதன் விளைவாக சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. அதில் இரு அணிகளும் தலா 15 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் சமனில் முடிந்தது. எனவே துடுப்பாட்ட விதிகளின் படி நியூசிலாந்து அணியை விட அதிக நான்குகள் அடித்திருந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.[1][2][3]
ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டதும் அது சமனில் முடிந்து நான்குகள் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டதும் இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றிலேயே மிகச் சிறந்ததாகவும் அதிக திருப்பங்கள் நிறைந்தததாகவும் கருதப்படுகிறது. [4][5][6][7]
இந்தப் போட்டியின் முடிவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக இந்தப் போட்டியின் கள நடுவராக இருந்த குமார் தர்மசேன, தாம் வரம்புமீறிய எறிவின் விளைவாக இங்கிலாந்து அணிக்கு ஒரு ஓட்டம் கூடுதலாக வழங்கியது தவறு என்று ஒப்புக்கொண்டார்.[8][9][10] இதன் விளைவாக வரம்புமீறிய எறிவு விதி குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று மெரிலெபோன் துடுப்பாட்டச் சங்கம் கூறியுள்ளது.[11][12]