2015 நேபாள நிலநடுக்கம்
From Wikipedia, the free encyclopedia
2015 நேபாள நிலநடுக்கம் (2015 Nepal earthquake) 2015 ஏப்ரல் 25 ஆம் நாள் சனிக்கிழமை உள்ளூர் நேரம் 11:56 மணிக்கு (6:11:26 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) இடம்பெற்ற 7.8 Mw நிலநடுக்கத்தைக் குறிக்கும். நேபாளத்தின் லாம்சுங் மாவட்டத்தின் கிழக்கு-தென்கிழக்கே 15 கிமீ (9.3 மைல்) தூரத்தில் மையம் கொண்டிருந்த இவ்வதிர்வு 15 கிமீ (9.3 மைல்) ஆழத்தில் இடம்பெற்றது.[1] 1934 நிலநடுக்கத்தின் பின்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். குறைந்தது 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் நேபாளத்திலும், வேறு சிலர் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் இறந்துள்ளனர். தலைநகர் காட்மாண்டூவில் பல-நூற்றாண்டுகள் பழமையான யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் கட்டடங்கள் பல அழிந்துள்ளன.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
நாள் | 25 ஏப்ரல் 2015 (2015-04-25) |
---|---|
தொடக்க நேரம் | 6:11:26 ஒசநே[1] |
நிலநடுக்க அளவு | 7.8 Mw,[1] |
ஆழம் | 15 கிமீ (9 மைல்)[1] |
நிலநடுக்க மையம் | 28.147°N 84.708°E / 28.147; 84.708[1] |
வகை | உந்துகை[1] |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | நேபாளம் வட இந்தியா சீன மக்கள் குடியரசு வங்காளதேசம் |
அதிகபட்ச செறிவு | IX (வன்மையான) [1] |
பின்னதிர்வுகள் | 6.6 MW ஏப்ரல் 25, 06:45 மணி[2] 6.7Mw 26 ஏப்ரல், 12:54 மணி[3] |
உயிரிழப்புகள் | 7,000 இறப்புகள் 14,000+ காயம்[4] |
நேபாளத்தின் பல இடங்களிலும் தொடர்ச்சியான பின்னதிர்வுகள் இடம்பெற்றன. ஏப்ரல் 26 உள்ளூர் நேரம் 12:54:08 மணிக்கு 6.7 அளவு பின்னதிர்வு இடம்பெற்றுள்ளது.[3]