2015 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
2015 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 8 அல்லது 2015 ஐபிஎல்), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், எட்டாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் ஏழு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. எட்டாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 08, 2015 முதல் மே 24, 2015 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 25 வரையிலான நாட்களில் கொல்கத்தாவில் நகராட்சித் தேர்தல் நடக்க உள்ளதால் அந்நாட்களில் கொல்கத்தாவில் எந்த ஆட்டமும் நடைபெறாது.[1]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...
இந்தியன் பிரீமியர் லீக் இலச்சினை | |
நாட்கள் | ஏப்ரல் 8, 2015 (2015-04-08) – 24 சூன் 2015 (2015-06-24) |
---|---|
நிர்வாகி(கள்) | பிசிசிஐ |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் தீர்வாட்டங்கள் |
நடத்துனர்(கள்) | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 60 |
அலுவல்முறை வலைத்தளம் | |
← 2014 2016 → |
மூடு