2009 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
2009 இந்தியன் பிரீமியர் லீக் அல்லது சுருக்கமாக '''IPL 2''' அல்லது '''2009 IPL''', இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)ஆல் 2007ல் நிறுவபட்ட இந்தியன் பிரீமியர் லீக் மட்டைப்பந்தாட்டத்தின் இரண்டாம் பருவ ஆட்டத்தை குறிக்கிறது. இந்த 2009 க்கான போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த ஆட்டங்கள் 18 ஏப்ரல் முதல் 24 மே 2009 வரை நடைபெற்றது.[3][4] மேலும் இந்தியாவில் மட்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொலைக்காட்சியில் போட்டிகளில் கண்டுள்ளனர்.[5]
விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...
நாட்கள் | ஏப்ரல் 18, 2009 (2009-04-18) – 24 மே 2009 (2009-05-24)[1] |
---|---|
நிர்வாகி(கள்) | பிசிசிஐ |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | இரண்டு முறை மற்றும் நாக் அவுட் |
நடத்துனர்(கள்) | தென்னாப்பிரிக்கா [2] |
வாகையாளர் | டெக்கான் சார்ஜர்ஸ் (1-ஆம் தடவை) |
இரண்டாமவர் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 59 |
தொடர் நாயகன் | அடம் கில்கிறிஸ்ற் (DC) (495 runs and 18 dismissals) |
அதிக ஓட்டங்கள் | மாத்தியூ எய்டன் (CSK) (572) |
அதிக வீழ்த்தல்கள் | ஆர். பி. சிங் (DC) (23) |
அலுவல்முறை வலைத்தளம் | www |
← 2008 2010 → |
மூடு
ஐபிஎல் இரண்டாவது பருவம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது காரணம் இந்தியப் பொதுத் தேர்தல், 2009 நடந்தால் பாதுகாப்புகள் கருதி இந்திய அரசு மறுத்துவிட்டது.[6][7] இரண்டாவது பருவ விளையாட்டு இந்தியாவில் நடத்தவில்லை என்றாலும் போட்டியின் வடிவத்தில் எந்த மாறுதலும் பிசிசிஜ செய்யவில்லை.[8]