2006 தோடா படுகொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் உள்ள குல்கந்து பகுதியில் நிகழ்ந்த 35 இந்து மக்கள / From Wikipedia, the free encyclopedia
2006 தோடா படுகொலை (2006 Doda Massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் உள்ள குல்கந்து பகுதியில் உள்ள தாவா கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஆடுகள் மேய்க்கும் இந்து சமய இடையர்கள் 34 பேரை, 30 ஏப்ரல் 2006 அன்று இரவில் பாகிஸ்தானிய இசுலாமிய பயங்கரவாதிகள் காட்டில் கடத்திச் சென்று வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர்.[1][2][3] இப்படுகொலைகளுக்கு பாகிஸ்தானிய இசுலாமிய லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பே காரணம் என இந்திய அரசு குற்றம் சாட்டியது.[4][5]
விரைவான உண்மைகள் இடம், நாள் ...
2006 தோடா படுகொலை | |
---|---|
ஜம்மு காஷ்மீரில் தோடாவின் அமைவிடம் | |
இடம் | தோடா மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
நாள் | 30 ஏப்ரல் 2006 |
இறப்பு(கள்) | 69 |
மூடு
அதே நாளில் நடைபெற்ற இரண்டாவது தீவிரவாதத் தாக்குதலில் உதம்பூர் மாவட்டத்தில் கொல்லா கிராமத்தில் வாழ்ந்த ஆடு மேய்ப்பவர்களான 35 இந்துக்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.[2]