ஸ்ரீவாரி பிரம்மோற்சவம்
From Wikipedia, the free encyclopedia
சிரீவெங்கடேசுவரா சுவாமி வாரி பிரம்மோற்சவம் (Srivari Brahmotsavam) அல்லது சிரீவாரி பிரம்மோற்சவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த[1] வருடாந்திர விழாவாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்தவிழா, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வரும் இந்து மாதமான புரட்டாசி கொண்டாடப்படுகிறது.[2]
இத்திருவிழாவின் போது கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் பல வாகனங்களில் வெங்கடாசலபதி சுவாமி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வெங்கடாசலபதி மற்றும் அவரது துணைவியார் சிரீதேவி மற்றும் பூதேவி ஆகியோரின் உற்சவ -மூர்த்தி (ஊர்வல தெய்வம்) சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்படும் விழாவினைக் காண இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி வருகின்றனர். பிரம்மோத்திரம் என்பது பிரம்மாவினை பெருமைப்படுத்தும் விதமாக, நடைபெறும் விழாவாகும். இது திருமலையில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரிய விழாவாகும். [3]