வால்டெமர் ஆஃப்கின்
உருசிய யூத நுண்ணுயிரியலாளர் / From Wikipedia, the free encyclopedia
வால்டெமர் மோர்டெகய் உல்ஃப் ஆஃப்கின், (Waldemar Mordecai Wolff Haffkine, உருசியம்: Мордехай-Вольф Хавкин; அல்லது பிரெஞ்சு மொழி: Mardochée-Woldemar Khawkine) (15 மார்ச்சு 1860, ஒடெசா,[1] உருசியப் பேரரசு - 26 அக்டோபர் 1930, லோசான், சுவிட்சர்லாந்து) உருசியப் பேரரசின் யூத நுண்ணியிரியலாளர் ஆவார். "உருசிய ஆர்த்தோடாக்சிக்கு மாற மறுத்ததால்" உருசியாவில் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.[2] அதனால் உருசியாவிலிருந்து குடிபெயர்ந்து பாரிசிலுள்ள பாசுட்டர் கழகத்தில் சேர்ந்தார். இங்கு வாந்திபேதிக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி அதனை இந்தியாவில் வெற்றிகரமாக சோதித்தார். வாந்திபேதிக்கும் அரையாப்பு பிளேக்குக்கும் தடுப்பூசியைக் கண்டறிந்து பயன்படுத்திய முதல் நுண்ணுயிரியியலாளராக ஏற்கப்பட்டுள்ளார். இந்தத் தடுப்பூசிகளை தம் மீதே சோதித்து பார்த்தார். ஜோசப் லிஸ்டர் பிரபு இவரை "மனிதகுலக் காப்பாளர்" என்றார்.
வால்டெமர் ஆஃப்கின் | |
---|---|
வால்டெமர் ஆஃப்கின் | |
பிறப்பு | 15 மார்ச்சு 1860 ஒடெசா, உருசியப் பேரரசு |
இறப்பு | 26 அக்டோபர் 1930 லோசான், சுவிட்சர்லாந்து |
துறை | நுண்ணுயிரியலாளர், புரோட்டோசூவாலாஜி |
பணியிடங்கள் | இம்பீரியல் நோவோரோசியா பல்கலைக்கழகம், ஜெனீவா பல்கலைக்கழகம், பாசுட்டர் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | இம்பீரியல் நோவோரோசியா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | வாந்திபேதிக்கும் அரையாப்பு பிளேக்குக்கும் தடுப்பூசிகள் |
Author abbrev. (botany) | காக்கின் |
1987இல் விக்டோரியா அரசியாரின் வைரவிழா ஆண்டில் இவருக்கு ஆண்டகை விருது (CIE) வழங்கப்பட்டது.