From Wikipedia, the free encyclopedia
இரத்லம் இராச்சியம் (Ratlam State)[1] இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிர்தேச மாநிலத்தின் ரத்லம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இரத்லாம் இராச்சியம் 2336 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 83,773 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப் படி 15 சூன் 1948 அன்று இரத்லம் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது இந்த இராச்சியத்தின் பகுதிகள் மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள ரத்லம் மாவட்டத்தில் உள்ளது.
ரத்லம் இராச்சியம் रतलाम रियासत | ||||||
சுதேச சமஸ்தானம், பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
ரத்லம் கோட்டம் மற்றும் சைலானா கோட்டத்தின் வரைபடம் | ||||||
தலைநகரம் | ரத்லம் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1652 | ||||
• | இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1901 | 2,336 km2 (902 sq mi) | ||||
Population | ||||||
• | 1901 | 83,773 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | ரத்லாம் மாவட்டம்,மத்தியப் பிரதேசம், இந்தியா |
மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த இரத்லம் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இரத்லம் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் மால்வா முகமையின் கீழ் செயல்பட்டது. இரத்லம் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.
இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, 15 சூன் 1948 அன்று இரத்லம் இராச்சியத்தின் பகுதிகள் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியில் உள்ள ரத்லம் மாவட்டத்தில் உள்ளது.
இரத்லம் இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் இராஜபுத்திர குலத்தின் ரத்தோர் வம்சத்தினர் ஆவார்.[1][2]
ஆட்சிக் காலம் | பெயர் | குறிப்பு |
---|---|---|
1648–1658 | இரத்தன் சிங் ரத்தோர் | |
1658–1682 | இராம் சிங் |
இவர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்து போரில் மடிந்தார் |
1682–1701 | கேசவதாஸ் |
இவரது படைவீரர் அவுரங்கசீப்பின் வரி வசூலிப்பாளரை கொன்றதால், இவர் மன்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் சீதாமௌ இராச்சியம் இவருக்கு வழக்கப்பட்டது. |
1705–1709 | சத்திரசால் (இறப்பு. 1712) |
இவர் முகலாயப் பேரரசில் தக்கானப் படைத்தலைவராக இருந்தார். இவர் பிஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்களுக்கு எதிராக போரிட்டார். |
1709 – பிப்ரவரி 1716 | கேசரி சிங் | |
பிப்ரவரி 1716–1716 | பிரதாப் சிங் | |
1716–1743 | மான் சிங் | |
1743–1773 | பிரிதிவி சிங் | |
1773–1800 | பதாம் சிங் | |
1800–1825 | பர்வத் சிங் | |
1825–29 ஆகஸ்டு 1857 | பல்வந்த் சிங் | |
1825–c.1832 | போர்த்விக் | பிரித்தானிய அரசப் பிரதிநிதி |
29 ஆகஸ்டு 1857 – 27 சனவரி 1864 | பைரோன் சிங் | |
27 சனவரி 1864 – 20 சனவ்ரி 1893 | ரஞ்சித் சிங் | |
27 சனவரி 1893 – 15 டிசம்பர் 1898 | சஜ்ஜன் சிங் வயது வரும் அரசப்பிரதிநிதியின் ஆட்சி | |
20 சனவரி 1893 – 1 சனவரி 1921 | சஜ்ஜன் சிங் | |
3 பிப்ரவரி 1947 – 15 ஆகஸ்டு 1947 | லோகேந்திர சிங் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.