யோசுவா
From Wikipedia, the free encyclopedia
யோசுவா (எபிரேயம்: יְהוֹשֻׁעַ; கிரேக்க மொழி: Ἰησοῦς, அரபு மொழி: يوشع بن نون), என்பவர் தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் நபரும், இஸ்ரேலுக்கான உளவாளிகளில் ஒருவரும் (எண் 13-14), மோசேக்கு உதவியாக விடுதலைப் பயணத்தில் இருந்தவரும் ஆவார்.[3] இவர் எபிரேய விவிலியத்தின் யோசுவா நூலின் மத்திய பாத்திரமும் ஆவார். விடுதலைப் பயண நூலின்படியும் எண்ணிக்கை நூலின்படியும் யோசுவா நூலின்படியும், இவர் இஸ்ரேலிய கோத்திரங்களின் தலைவராக மோசேயின் மரணத்தின் பின் திகழ்ந்தார். ஓசேயா என முன்பு பெயர் கொண்டிருந்த இவருடைய தந்தை எபிராயிம் கோத்திரத்தைச் சேர்ந்த நூன் ஆவார். ஓசேயா என்ற இவரை மேசே யோசுவா என அழைத்தார்.(Numbers 13:16) தனது பற்றுறுதி காரணமாக மிகச்சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார்.
விரைவான உண்மைகள் யோசுவா, விவிலிய நீதித்தலைவர் ...
யோசுவா | |
---|---|
மேசேயும் கானானிலிருந்து செய்தியாளர்களும், கியோவானியின் எண்ணெய் வர்ணம் 85-3/4 x 97 அங்குலம் | |
விவிலிய நீதித்தலைவர் | |
பிறப்பு | 1550-1440 கி.மு |
இறப்பு | 1550-1440 கி.மு கானான் |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம், கிறித்தவம், இசுலாம் |
முக்கிய திருத்தலங்கள் | யோசுவா கல்லறை |
திருவிழா |
|
சித்தரிக்கப்படும் வகை | கானானிலிருந்து திராட்சையினை சுமந்து வருதலுக்கான காலேபுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். |
மூடு