![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Western-ganga-empire-map.svg/langta-640px-Western-ganga-empire-map.svg.png&w=640&q=50)
மேலைக் கங்கர்
From Wikipedia, the free encyclopedia
மேலைக் கங்கர்கள் (கன்னடம்: ಪಶ್ಚಿಮ ಗಂಗ ಸಂಸ್ಥಾನ): தமிழ்) பழங்கால கருநாடகத்தில் இருந்த ஓர் சிறப்பு வாய்ந்த அரசமரபாகும். மைசூர் கோலார் பகுதிகளில் தமிழ் கங்க மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.இது கிபி 350 - 1000 வரை ஆட்சியில் இருந்தது. இதை மேலைக் கங்கர்களின் அரசமரபு என்றும் கூறுவர். கலிங்கத்தை ஆண்ட (தற்கால ஒடிசா) கீழை கங்கர்களிடம் (கிழக்கு கங்கர்கள்) இருந்து வேறுபடுத்துவதற்காக இவர்கள் மேலைக் கங்கர்கள் எனப்படுகின்றனர். பல்லவ பேரரசின் வலு குன்றிய நேரத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்கள் விடுதலை வேண்டும் என புரட்சி செய்தனர். அக்கால கட்டத்தில் இவர்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சமுத்திர குப்தரின் படையெடுப்புக்கும் இக்கால கட்டத்தின் குழப்பமான நிலையே காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கிபி 350லிருந்து 550 வரை இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தார்கள். முதலில் கோலாரிலும் பின்னர் தலக்காட்டிலும் தங்கள் தலைநகரை அமைத்தார்கள். வாதாபி மேலைக்ச்சாளுக்கியர்கள் சீர்குலைந்து, சிதைந்து போகவே கங்க வம்சத்து சிவமாறன் என்ற இளவரசன் கொங்கல் நாடு 8,000 என்ற பகுதியின் சிற்றரசனாக முடிசூட்டிக்கொண்டு கி. பி.755 முதல் கி. பி. 765 வரை ஆட்சிசெய்தான். இவனே கங்க வம்சத்து முதல் அரசன், இவனை கொங்கணி மகாராஜன் என பிருதுகள் சாசனம் விவரிக்கிறது.[1] வாதாபி மேலைக்ச்சாளுக்கியர்கள் ஆட்சிப் பகுதியை ஆட்சி செய்ததால் மேலைக் கங்கர்கள் ஆயினர்.
மேலைக் கங்க அரசமரபு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
350–1000 | |||||||||
![]() மேலைக் கங்கர்களின் நிலப்பகுதி | |||||||||
நிலை | பேரரசு (350 வரை பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசு) | ||||||||
தலைநகரம் | கோலார் தலக்காடு | ||||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ் கன்னடம் | ||||||||
சமயம் | சமணம் இந்து | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மகாராஜா | |||||||||
• 350–370 | கொங்கணிவர்மா மகாதேவா | ||||||||
• 986–999 | இராசமல்லன் V | ||||||||
வரலாறு | |||||||||
• கங்க ஆவணங்கள் கிடைத்த காலம் | 400 | ||||||||
• தொடக்கம் | 350 | ||||||||
• முடிவு | 1000 | ||||||||
|
கொங்கனிவர்மன் என்று களப்பிரர் மன்னன் வருவதால் கங்கர்களே களப்பிரர் என்ற கூற்றும் உண்டு.
பாதமி சாளுக்கியர்களின் எழுச்சிக்குப்பின் அவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக காஞ்சி பல்லவர்களுடன் மோதினர். சாளுக்கியர்கள் வழுவிழந்து இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கம் கிபி 753ல் தக்காணத்தில் ஏற்பட்டவுடன் தன்னாட்சிக்காக நூறு ஆண்டுகள் போராடி பின் இராஷ்ரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக தஞ்சை சோழர்களை எதிர்த்தார்கள். கிபி 10த்தில் துங்கபத்ரா ஆற்றின் வடக்கில் இராஷ்ரகூடர்களை மேலைக் சாளுக்கியர்களும் சோழர்களும் இணைந்து முறியடித்தனர். சோழர்களால் மேலைக் கங்கர்கள் தோற்கடிக்கப்பட்டவுடன் கங்கர்களின் 1000 ஆண்டு செல்வாக்கு அப்பகுதியில் முடிவுக்கு வந்தது.
பரப்பளவில் சிறிய நாடாக இருந்தபோதிலும் தற்போதைய தென் கருநாடகத்துக்கு பண்பாடு, இலக்கியம் போன்றவற்றில் இவ்வரசின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் தமிழ் மன்னர்கள். மைசூர் கோலார் பகுதிகளில் தமிழ் கங்க மன்னர்கள் ஆட்சி இருந்தது.மேலைக் கங்கர்கள் எல்லா சமயங்களையும் ஆதரித்தார்கள். சமண சமயத்தை பெரிதும் ஆதரித்தார்கள். சரவணபெலகுளா, பஞ்சகுட்ட பாசதி போன்றவை இவர்கள் காலத்தில் உருவானதாகும். இவர்கள் கூத்துகலையை பெரிதும் ஆதரித்தார்கள். இது தமிழ், சமசுகிருத இலக்கியங்கள் வளர துணைபுரிந்தது. யானைகள் மேலாண்மை, சமயம் உட்பட பல நூல்கள் இயற்றப்பட்டன.
மாலிக் கபூர் படையெடுப்பு பின்னர் கங்க மன்னன் ஆட்சி இழந்து தெற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பாண்டியன் படை தளபதிகளாக குடி பெயர்ந்தனர்