தலக்காடு
From Wikipedia, the free encyclopedia
தலக்காடு (தமிழ்: தலைக்காடு) என்பது கர்நாடகாவில் பாயும் காவிரியின் இடக்கரையில் அமைந்துள்ள பண்டைய நகரமாகும். இது மைசூரிலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது 350-1050 கிபி வரை மேலைக் கங்கர்களின் தலைநகரமாக விளங்கியது. கிபி 11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் மேற்கு கங்கர்களை முறியடித்து தலைக்காட்டைக் கைப்பற்றினர். இங்கு 30க்கும் அதிகமான கோயில்கள் இருந்தன. தற்போது தலைக்காட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற உள்ளது.[1]