மூன்றாம் பால்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் பாலினம் (Third gender) அல்லது மூன்றாம்பால் (third sex) எனும் கருத்தினம், தங்களாலோ சமூகத்தாலோ ஆண் அல்லது பெண்ணாக வகைப்படுத்த இயலாத தனியர்களைக் குறிக்கும். இது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலின அமைப்புகள் நிலவும் சமூகத்தில் அமையும் சமூக வகைபாடாகும். மூன்றாம் எனும் சொல் வழக்கமாக "மற்றமை" எனப் பொருள்படும்; சில பண்பாட்டு மானிடவியலால்லர்களும் சமூகவியலாளர்களும் நான்காம்,[1] ஐந்தாம்,[2] and "some"[3] பாலினங்களையும் விளக்கியுள்ளனர்.
உயிரியல் ஒரு மாந்தரின் குறுமவக, உடற்கூற்றுப் பால் ஆணா, பெண்ணா, அல்லது இந்த [[பாலியல் ஈருருவியம் #மாந்தர்கள்|பாலியல் ஈருருவியத்தின்] ] பொதுவாக அமையாத, ஊடுபாலினம் எனப்படும் மயங்கியநிலை வேறுபாடுகளில் ஒன்றா என்பதைத் தீர்மானிக்கிறது.[4][5] என்றாலும், தன் ஆளுமை அடையாளநிலையாக, சமூகத்தால் அடையாளப்படுத்தப்படும் இருப்புநிலையாக ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது மற்றமையாகவோ அமைதல், வழக்கமாக அவர்கள் வாழும் குறிப்பிட்ட பண்பாட்டில் தனியரது பாலினப் பாத்திரத்தையும் பாலின அடையாளத்தையும் சார்ந்தமைகிறது. அனைத்துப் பண்பாடுகளும் கச்சிதமாக பாலினப் பாத்திரங்களை வரையறுப்பதில்லை.[6][7][8]
தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினத்தாரை தற்போது அங்கீகரிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் அடையாள அட்டை, மற்றும் இதர சேவைகளைப் பெற மூன்றாம் பால் என தம்மை அடையாளப்படுத்துவதை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இது ஒரு முக்கிய அரசியல் சமூக மாற்றமாக பார்க்கபபடுகிறது.