இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.
மாயாவதி நைனா குமாரி | |
---|---|
உத்தரப் பிரதேச மாநிலத்தின் 23வது, 24வது, 30வது மற்றும் 32வது முதலமைச்சர்[1] | |
பதவியில் சூன் 3, 1995 – அக்டோபர் 18, 1995 மார்ச் 21, 1997 – செப்டம்பர் 21, 1997 மே 3, 2002 – ஆகஸ்ட் 29, 2003, மே 13, 2007- மார்ச் 7, 2012. | |
முன்னையவர் | முலாயம் சிங் யாதவ் குடியரசுத்தலைவர் ஆட்சி குடியரசுத்தலைவர் ஆட்சி முலாயம் சிங் யாதவ் |
பின்னவர் | குடியரசுத்தலைவர் ஆட்சி கல்யாண் சிங் முலாயம் சிங் யாதவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 15, 1956 புதுதில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி |
உயரம் | 200 px |
வாழிடம்(s) | இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | bspindia.org |
1984இல் கான்ஷி ராமால் தலித் மக்களுக்காக தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.
மாயாவதி இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் பிறந்து வளர்ந்தவர். 1956-ம் வருடம் சனவரி 15 அன்று இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை ஒரு அஞ்சல் அலுவலக ஊழியர். தமது அன்னையின் அரவணைப்பால் கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளைப் பயின்றார். பின்னாளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.