மங்கோலியா
கிழக்காசியாவின் நிலஞ்சூழ் நாடு / From Wikipedia, the free encyclopedia
மங்கோலியா[lower-alpha 2] ((Mongolia, /mɒŋˈɡoʊliə/ (கேட்கⓘ) mong-GOH-lee-ə) என்பது கிழக்காசியாவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இதற்கு வடக்கே உருசியாவும், தெற்கே சீனாவும் எல்லைகளாக உள்ளன. மங்கோலியாவின் மேற்குக் கோடி முனையானது கசக்கஸ்தானில் இருந்து வெறும் 23 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. வரை படத்தில் காணும் போது இப்பகுதியானது ஒரு நாற்சந்திப்பை ஒத்திருக்கலாம். இந்நாட்டின் பரப்பளவு 15,64,116 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் மொத்த மக்கள்தொகை வெறும் 33 இலட்சமே ஆகும். உலகின் மிகவும் அடர்த்தி குறைவான இறையாண்மையுள்ள நாடாக இது திகழ்கிறது. நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடலை எல்லையாகக் கொண்டிராத உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடு மங்கோலியா ஆகும். இந்த நாட்டின் பெரும்பாலான நிலமானது ஸ்டெப்பி புல்வெளிகளால் மூடப்பட்டுள்ளது. இந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கே மலைகளும், தெற்கே கோபிப் பாலைவனமும் உள்ளன. இதன் தலைநகரமாகவும், மிகப் பெரிய நகரமாகவும் உலான் பத்தூர் திகழ்கிறது. தோராயமாக இந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேரை இந்நகரம் கொண்டுள்ளது.
மங்கோலியா
| |
---|---|
நாட்டுப்பண்: Монгол улсын төрийн дуулал Mongol ulsyn töriin duulal "மங்கோலிய தேசிய கீதம்" | |
அரசின் முத்திரை: | |
தலைநகரம் | உலான் பத்தூர்[lower-alpha 1] |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | மொங்கோலியம் |
அதிகாரப் பூர்வ எழுத்து முறைகள் | |
இனக் குழுகள் (2020[2]) |
|
சமயம் (2020[2]) |
|
மக்கள் | மங்கோலியர் |
அரசாங்கம் | ஒற்றை சபையையுடைய, அதிபருக்கு பகுதியளவு அதிகாரமுடைய குடியரசு[3] |
• அதிபர் | உக்நாகீன் குரேல்சுக் |
• பிரதம மந்திரி | லுவ்சன்னம்சராய்ன் ஒயுன்-எர்தீன் |
• அரசின் பெரும் குறாலின் தலைவர் | கோம்போசவின் சந்தன்சதர் |
சட்டமன்றம் | அரசின் பெரும் குறால் |
நிறுவுதல் | |
பொ. ஊ. மு. 209 | |
பொ. ஊ. 1206 | |
• சிங் அரசமரபால் முழுமையாக வெல்லப்பட்டது | பொ. ஊ. 1691 |
• சிங் அரசமரபிடமிருந்து விடுதலை அறிவிக்கப்பட்டது | 29 திசம்பர் 1911 |
• மங்கோலிய மக்கள் குடியரசு நிறுவப்பட்டது | 26 நவம்பர் 1924 |
• தற்போதைய அரசியலமைப்பு | 12 பெப்பிரவரி 1992 |
பரப்பு | |
• மொத்தம் | 1,564,116 km2 (603,909 sq mi) (18வது) |
• நீர் (%) | 0.67[4] |
மக்கள் தொகை | |
• 2023[5] மதிப்பிடு | 35,04,741 (131வது) |
• அடர்த்தி | 2.24/km2 (5.8/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2023 மதிப்பீடு |
• மொத்தம் | ஐஅ$52.989 பில்லியன் (₹3,78,956.1 கோடி)[6] (124வது) |
• தலைவிகிதம் | ஐஅ$15,087 (₹10,78,961.9)[6] (103வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2023 மதிப்பீடு |
• மொத்தம் | ஐஅ$18.782 பில்லியன் (₹1,34,321.4 கோடி)[6] (136வது) |
• தலைவிகிதம் | ஐஅ$5,348 (₹3,82,467.6)[6] (115வது) |
ஜினி (2018) | 32.7[7] மத்திமம் |
மமேசு (2022) | 0.741[8] உயர் · 96வது |
நாணயம் | தோக்குரோக்கு (MNT) |
நேர வலயம் | ஒ.அ.நே+7/+8[9] |
திகதி அமைப்பு | yyyy.mm.dd (பொ. ஊ.) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +976 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | MN |
இணையக் குறி | .mn, .мон |
தற்போதைய மங்கோலியாவின் நிலப்பரப்பானது பல்வேறு நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்டுள்ளது. இதில் சியோங்னு, சியான்பே, உரூரன் ககானரசு, முதல் துருக்கியக் ககானரசு, இரண்டாம் துருக்கியக் ககானரசு, உயுகுர் ககானரசு மற்றும் பிற அரசுகளும் அடங்கும். 1206இல் செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தார். வரலாற்றின் மிகப் பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசாக இது உருவானது. இவரது பேரன் குப்லாய் கான் மைய சீனாவைக் கைப்பற்றினார். யுவான் அரசமரபை நிறுவினார். யுவான் அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியர்கள் மங்கோலியாவுக்குப் பின் வாங்கினர். தயன் கான் மற்றும் தியூமன் சசக்த் கான் ஆகியோரின் சகாப்தங்களைத் தவிர்த்து பிற காலங்களில் தங்களுடைய முந்தைய வாழ்க்கை முறையான பழங்குடியினச் சண்டைகளை மங்கோலியர்கள் தொடர்ந்தனர். 16ஆம் நூற்றாண்டில் திபெத்தியப் பௌத்தமானது மங்கோலியாவுக்குப் பரவியது. சிங் அரசமரபானது மஞ்சு இனத்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அரசமரபு மங்கோலியாவை 17ஆம் நூற்றாண்டில் இணைத்துக் கொண்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வாக்கில் இந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் பௌத்தத் துறவிகளாக இருந்தனர்.[10][11] 1911இல் சிங் அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியா விடுதலையை அறிவித்தது. ஆனால், சீனக் குடியரசிடமிருந்து உண்மையான சுதந்திரத்தை 1921ஆம் ஆண்டு தான் அடைந்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே மங்கோலியாவானது சோவியத் ஒன்றியத்தின் ஒரு சார்பு நாடாக மாறியது. 1924இல் ஒரு சோசலிசக் குடியரசாக மங்கோலிய மக்கள் குடியரசு நிறுவப்பட்டது.[12] 1989ஆம் ஆண்டின் பொதுவுடமைவாத எதிர்ப்புப் புரட்சிக்குப் பிறகு மங்கோலியா 1990ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இதன் சொந்த அமைதியான சனநாயகப் புரட்சியை நடத்தியது. பல கட்சி ஆட்சியமைப்பு, 1992ஆம் ஆண்டில் ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் சந்தைப் பொருளாதாரத்துக்கான மாற்றம் ஆகியவற்றுக்கு இப்புரட்சி வழி வகுத்தது.
தோராயமாக 30% மக்கள் நாடோடிகளாகவோ அல்லது பகுதியளவு நாடோடிகளாகவோ உள்ளனர். பண்பாட்டில் குதிரையானது இன்னும் ஓர் அங்கமாகத் தொடர்கிறது. நாட்டின் பெரும்பான்மையான சமயமாக பௌத்தமும் (51.7%), இரண்டாவது பெரிய குழுவாக சமயம் சாராதவர்களும் (40.6%) உள்ளனர். மூன்றாவது பெரிய குழுவாக இசுலாமியர் (3.2%) உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கசக் இனத்தவர்களாக உள்ளனர். நாட்டின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். தோராயமாக 5% கசக்குகள், துவர்கள், மற்றும் பிற சிறுபான்மையினராக உள்ளனர். இவர்கள் குறிப்பாக மேற்குப் பகுதிகளில் அதிகளவில் உள்ளனர். ஐக்கிய நாடுகள் அவை, ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை, ஜி77, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, மற்றும் அணி சேரா இயக்கம் ஆகிய அமைப்புகளில் ஓர் உறுப்பினராக மங்கோலியா உள்ளது. மேலும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் சர்வதேசக் கூட்டாளியாகவும் உள்ளது. 1997ஆம் ஆண்டு உலக வணிக அமைப்பில் மங்கோலியா இணைந்தது. பிராந்தியப் பொருளாதார மற்றும் வணிகக் குழுக்களில் தன் பங்களிப்பை விரிவாக்க மங்கோலியா முயற்சி செய்து வருகிறது.[4]