பைஜ்நாத், உத்தராகண்டம்
From Wikipedia, the free encyclopedia
பைஜ்நாத் (Baijnath) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் பாகேசுவர் மாவட்டத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். நகரம் அதன் பழங்கால கோயில்களுக்கு மிகவும் பிரபலமானது.[1] அவை உத்தராகண்டத்திலுள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் தேசிய முக்கியத்துவத்தின் நினைவுச்சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2] இந்திய அரசின் "சுதேசி தரிசனத் திட்டத்தின்" கீழ் குமாவுனிலுள்ள 'சிவா ஹெரிடேஜ் சர்க்யூட்' மூலம் இணைக்கப்பட்ட நான்கு இடங்களில் பைஜ்நாத்தும் ஒன்று.[3] இத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட பிற இடங்கள்: ஜெகேஷ்வர் கோயில்கள், அல்மோராவிலுள்ள கதார்மல் சூரியக் கோயில், சம்பாவத் மாவட்டத்திலுள்ள தேவிதுரா.[4][5]
பைஜ்நாத் | |
---|---|
நகரம் | |
மேலிருந்து கீழ்: பைஜ்நத்தின் வான் காட்சி, பைஜ்நாத் கோயில்கள், பைஜ்நாத் ஏரி | |
ஆள்கூறுகள்: 29.92°N 79.62°E / 29.92; 79.62 | |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | பாகேசுவர் |
Established | பொ.ச. 850 |
தோற்றுவித்தவர் | நரசிங்க தேவ் |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | உகே 02 |
இணையதளம் | uk |
அன்றைய கார்த்திகேயபுரம் என்று அழைக்கப்பட்ட பைஜ்நாத், நவீன கால நேபாள மாநிலமான தோட்டி, இந்தியாவின் உத்தராகண்டத்திலுள்ள குமாவுன் பகுதி கார்வால் நாடு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பகுதியை ஆட்சி செய்த கத்யூரி மன்னர்களின் இருக்கையாகும்.