புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி
இந்திய நாடாளுமன்றத்தின் இருக்கை / From Wikipedia, the free encyclopedia
புது தில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடம் இந்திய நாடாளுமன்றத்தின் இருக்கையாகும். இது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, அவை முறையே இந்தியாவின் ஈரவை நாடாளுமன்றத்தில் கீழ் மற்றும் மேல் சபைகளாகும்.
நாடாளுமன்றக் கட்டிடம் | |
---|---|
சன்சத் பவன் | |
பொதுவான தகவல்கள் | |
முகவரி | 118, ரஃபி மார்க், புது தில்லி, தில்லி |
நகரம் | புது தில்லி |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 28°37′02″N 77°12′36″E |
தற்போதைய குடியிருப்பாளர் | இந்திய நாடாளுமன்றம் |
அடிக்கல் நாட்டுதல் | 1 அக்டோபர் 2020 |
நிறைவுற்றது | 28 May 2023 |
திறக்கப்பட்டது | 19 செப்டம்பர் 2023 |
கட்டுவித்தவர் | மத்திய பொதுப்பணித்துறை |
உரிமையாளர் | இந்திய அரசு |
உயரம் | 39.6 மீட்டர் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 4[1] |
தரைகள் | 65,000 m2 (700,000 sq ft)[2] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பிமல் படேல் |
கட்டிடக்கலை நிறுவனம் | HCP வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரைவேட் லிமிடெட் |
முதன்மை ஒப்பந்தகாரர் | டாடா ப்ராஜெக்ட்ஸ் |
பிற தகவல்கள் | |
இருக்கை திறன் | 1,272 (மக்களவை அறை: 888 மாநிலங்களவை அறை: 384) |
பொது போக்குவரத்து அணுகல் | மத்திய செயலகம் |
வலைதளம் | |
sansad.in |
இந்தியாவின் மத்திய விசுடா மறுவளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, புது தில்லியில் ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது. இது 28 மே 2023 அன்று பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்பட்டது.[3]
இது ரஃபி மார்க்கில் அமைந்துள்ளது, இது மத்திய விசுடாவைக் கடந்து பழைய நாடாளுமன்றக் கட்டிடம், விஜய் சௌக், இந்தியா வாயில், தேசிய போர் நினைவிடம், குடியரசுத் துணைத் தலைவர் இல்லம், ஐதராபாத்து இல்லம், செயலக கட்டிடம், பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம், அமைச்சக கட்டிடங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் மற்ற நிர்வாக அலகுகளால் சூழப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் முதன்முதலில் 19 செப்டம்பர் 2023 அன்று நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் போது,[4] இந்திய நாடாளுமன்றம் என்ற பெயருடன் அதிகாரப்பூர்வ அலுவல்களுக்காக பயன்படுத்தப்பட்டது.