புடு சிறைச்சாலை
From Wikipedia, the free encyclopedia
புடு சிறைச்சாலை (ஆங்கிலம்: Pudu Prison அல்லது Pudu Jail; மலாய்: Penjara Pudu; சீனம்: 半山芭监狱); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்த ஒரு சிறைச்சாலை ஆகும். கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்து இருந்த புடு சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது.[2]
விரைவான உண்மைகள் இடம், நிலை ...
| |
இடம் | ஜாலான் ஆங் துவா, கோலாலம்பூர், மலேசியா |
---|---|
நிலை | புக்கிட் பிந்தாங் நகர மையம் என மறுவடிவமைப்பு செய்யப்பட்டது) |
பாதுகாப்பு வரையறை | நடுத்தர பாதுகாப்பு |
திறக்கப்பட்ட ஆண்டு | 1895[1] |
மூடப்பட்ட ஆண்டு | 1996 |
நிருவாகம் | மலேசிய சிறைத் துறை (1895 - 1996) அரச மலேசிய காவல் துறை (2003 - 2008) |
மூடு
இந்தச் சிறைச்சாலை 1891-இல் கட்டத் தொடங்கி 1895-இல் கட்டி முடிக்கப்பட்டது. மலேசியாவின் சுற்றுலா தளமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது. இந்தச் சிறைச்சாலை கோலாலம்பூரில் ஜாலான் ஷாவில் (Jalan Shaw - Jalan Hang Tuah) இருந்தது.
உலகிலேயே மிக நீளமான சுவரோவியம் புடுச் சிறைச்சாலையின் சுவரில்தான் வரையப்பட்டது. இந்தச் சிறைச்சாலையில் கொடுக்கப்படும் பிரம்படிகள் அனைவராலும் பேசும் பொருளானது.[3]