பிஸ்த் தோவாப்
இந்திய பஞ்சாப்பின் ஒரு மண்டலம் / From Wikipedia, the free encyclopedia
பிஸ்த் தோவாப் (Doaba also known as Bist Doab), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாயும் சட்லஜ் ஆறு மற்றும் பியாஸ் ஆறுகளிடையே அமைந்த நீர் வளம் மற்றும் நில வளம் மிக்க பிரதேசம் ஆகும்.[1]பாரசீக மொழியில் தோவாப் எனபதற்கு இரு ஆறுகளிடையே அமைந்த நீர் வளம் மற்றும் வண்டல் மண் நிறைந்த நில வளம் மிக்க பகுதி எனப்பொருளாகும். [2] பிஸ்த் தோவாப் பிரதேசத்தில் பாயும் சட்லஜ் ஆற்றின் தெற்கில் மால்வா, மால்வா பகுதியும், பியாஸ் ஆற்றின் வடக்கில் மஜ்ஜா பகுதியும் உள்ளது. இப்பகுதியில் கோதுமை மற்றும் பாசுமதி நெல் அதிக அளவில் விளைகிறது.
பிஸ்த் தோவாப் பிரதேசத்தில் சீக்கியர்களுடன் பட்டியல் சமூத்தவர்கள 40% மேலாகவும் மற்றும் சைனி வகுப்பினர், ஜாட் மக்கள் மற்றும் கம்போ மக்களும் வாழ்கின்றனர். 1947-இல் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து இப்பகுதியில் குடியேறிய இந்து, சீக்கிய மக்கள் வாழ்கின்றனர்.[3]