![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/Flag_of_Thekkumkur.png/640px-Flag_of_Thekkumkur.png&w=640&q=50)
நீராழி அரண்மனை
கேரள அரச குடும்பத்து அரண்மனை / From Wikipedia, the free encyclopedia
நீராழி அரண்மனை (Neerazhi Palace) ( மலையாளம்: നീരാഴി കൊട്ടാരം ) என்பது தெக்கும்கூர் இராச்சியத்தின் அரச அரண்மனையாகும். இந்த அரண்மனை சங்கனாச்சேரியிலுள்ள புழவத்தில் அமைந்துள்ளது . [1] இது தெக்கும்கூர் இராச்சியத்தின் நிர்வாக தலைமையகமாகவும், அரச அரண்மனையாகவும் இருந்தது. இந்த அரண்மனை சங்கனாசேரியிலுள்ள ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் நீராழி அரண்மனை നീരാഴി കൊട്ടാരം, பொதுவான தகவல்கள் ...
நீராழி அரண்மனை നീരാഴി കൊട്ടാരം | |
---|---|
![]() தெக்குகூர் அரசின் கொடி | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | எட்டுக்கெட்டு கேரளக் கட்டிடக்கலை |
நகரம் | புழவத்து, சங்கனாச்சேரி, கோட்டயம் மாவட்டம் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 9.466667°N 76.55°E / 9.466667; 76.55 |
கட்டுமான ஆரம்பம் | 15ஆம் நூற்றாண்டு |
கட்டுவித்தவர் | கோத வர்மன் மணிகண்டனால் 15ஆம் நூற்றாண்டின் கட்டப்பட்டது. (பொ.ச.1408 - 1440 ) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | செந்நிறக் களிமண் கல், கற்சாந்து, தேக்கு, ரோஸ்வுட் மரம், ஆங்கில்கள் மரம் |
அளவு | Originally 1.23 ஏக்கர்கள் (0.50 ha) |
மூடு
இந்த அரண்மனையை தெக்கும்கூர் வம்சத்தினர் பொ.ச.1750 வரை பயன்படுத்தினர். பின்னர் வடக்கு மலபாரிலிருந்து சங்கனாசேரியில் குடியேறிய பரப்பநாடு வம்சத்தினரும் பயன்படுத்தினர். [2] 1790ஆம் ஆண்டு திருவிதாங்கூரின் படையெடுப்பில் ( சங்கனாசேரி போர் ) தெக்கும்கூரின் கடைசி மன்னர் ஆதித்ய வர்மன் மணிகண்டன் கோட்டயம் நாட்டசேரிக்கு தப்பினார். [3] நீராழி அரண்மனை முன்பு 'நீராழிக்கெட்டுக் கொட்டாரம்' என்று அழைக்கப்பட்டது. [4]