![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/ff/Periplous_of_the_Erythraean_Sea.svg/langta-640px-Periplous_of_the_Erythraean_Sea.svg.png&w=640&q=50)
பரப்பநாடு
கேரளாவிலிருந்த ஒரு அரசு / From Wikipedia, the free encyclopedia
பரப்பநாடு (Parappanad) என்பது இந்தியாவின் மலபாரில் ஒரு முன்னாள் நிலப்பிரபுத்துவ சுதேச மாநிலமாக இருந்தது. [1] பரப்பநாடு அரசக் குடும்பத்தின் தலைமையகம் இன்றைய மலப்புறம் மாவட்டத்திலுள்ள பரப்பனங்காடி என்ற ஊரில் இருந்தது. பொ.ச.1425ஆம் ஆண்டில், நாடு வடக்கு பரப்பநாடு (பேப்பூர் இராச்சியம்), தெற்கு பரப்பநாடு (பரப்பூர் சொரூபம்) எனப் பிரிக்கப்பட்டது. தெற்கு பரப்பநாட்டில் திரூரங்கடியும், பரப்பனங்காடி நகரமும் அடங்கும். வடக்கு பரப்பநாடு (பேப்பூர் இராச்சியம் அல்லது கரிப்பா கோவிலகம்) பன்னியங்கறை, பேப்பூர், கோழிக்கோடு வட்டத்தின் செருவண்ணூர் ஆகியவையும் அடங்கும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/ff/Periplous_of_the_Erythraean_Sea.svg/640px-Periplous_of_the_Erythraean_Sea.svg.png)
பரப்பநாட்டின் ஆட்சியாளர்கள் கோழிக்கோடு நாட்டின் சாமோரியன்களின் கீழ் ஆண்டு வந்தனர். மேலும் வடக்கே பேப்பூர் துறைமுகம் வரை அதிகார வரம்பைக் கொண்டிருந்தனர். இடைக்காலத்தின் ஆரம்பத்தில், கோழிக்கோடு, பரப்பநாடு மலபார் கடற்கரையில் ஒரு முக்கியமான கடல் வர்த்தக மையமாக வளர்ந்தது. பின்னர் இது பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் மலபார் மாவட்டத்தில் ஏறநாடு வட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.