நிருபதுங்கா விருது
கன்னட மொழியில் வழங்கப்படும் இலக்கியத்திற்கான விருது / From Wikipedia, the free encyclopedia
நிருபதுங்கா விருது (Nrupatunga Award) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருது கன்னட சாகித்ய பரிசத்தால் நிறுவப்பட்டது. பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் இதற்கான நிதியுதவியை அளிக்கிறது. ராசுடிரகூட மன்னர் முதலாம் நிருபதுங்க அமோகவர்சாவின் (814–878) நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது ₹700,001 பணமுடிப்பை கொண்டதாகும். 9 ஆம் நூற்றாண்டில் கன்னட மொழிக்கு அவர் அளித்த ஆதரவிற்காகவும் பங்களிப்பிற்காகவும் பொதுவாக இந்திய வரலாற்றிலும், குறிப்பாக கர்நாடகாவிலும் மன்னர் நிருபதுங்கா ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார்.
விரைவான உண்மைகள் நிருபதுங்கா விருது Nrupatunga Award, விருது வழங்குவதற்கான காரணம் ...
நிருபதுங்கா விருது Nrupatunga Award | |
---|---|
இலக்கிய பங்களிப்புகளுக்கான குடிமை விருது | |
விருது வழங்குவதற்கான காரணம் | கருநாடக இலக்கியச் சிறப்பு விருது |
இதை வழங்குவோர் | பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் |
வெகுமதி(கள்) | ₹700,001 |
முதலில் வழங்கப்பட்டது | 2007 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2020 |
Highlights | |
மொத்த விருதுகள் | 15 |
முதல் வெற்றியாளர் | ஜவரே கவுடா |
சமீபத்திய வெற்றியாளர் | கு. சி. அமுர் |
மூடு