![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Caravaggio_-_The_Incredulity_of_Saint_Thomas.jpg/640px-Caravaggio_-_The_Incredulity_of_Saint_Thomas.jpg&w=640&q=50)
தோமா (திருத்தூதர்)
இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
புனித தோமா அல்லது புனித தோமையார் (St. Thomas) இயேசு தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் (அப்போஸ்தலர்) ஒருவர். இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.
திருத்தூதர் புனித தோமா Saint Thomas (Apostle) | |
---|---|
![]() "தோமாவின் ஐயம்" – கரவாஜியோ | |
ஐயப்படும் தோமா | |
பிறப்பு | ~ கிபி 1 (முற்பகுதி) கலிலேயா |
இறப்பு | டிசம்பர் 21, 72-கிபி புனித தோமையார் மலை, மயிலாப்பூர், சென்னை, இந்தியா, சோழ அரசு(நம்பப்படுகிறது) |
ஏற்கும் சபை/சமயங்கள் | எல்லா கிறித்தவப் பிரிவுகளும் |
முக்கிய திருத்தலங்கள் | சென்னை சாந்தோம் தேவாலயம் |
திருவிழா | ஜூலை 3 – கத்தோலிக்கம் அக்டோபர் 6 அல்லது ஜூன் 30 – கிழக்கு மரபு உயிர்பு விழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை - பொது |
சித்தரிக்கப்படும் வகை | இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல் |
பாதுகாவல் | கட்டட கலைஞர், (இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் உட்படி புனித தோமா கிறிஸ்தவர்கள் மற்றும்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்) இந்தியா, இலங்கை மற்றும் குரோவாசியாவில் உள்ள புலா |
உரோமைப் பேரரசுக்கு வௌியே நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்ட தோமா, இந்தோ-பார்த்தியா அரசிலும், பழங்கால தமிழகத்திலும் (தற்போதைய கேரளம், தமிழ்நாடு) பணி செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.[1][2][3][4] பாரம்பரியத்தின்படி, திருத்தூதர் முசிறித் துறைமுகம் வந்தடைந்தார் எனவும், சிலருக்கு 52 இல் திருமுழுக்கு அளித்து, தற்போது புனித தோமா கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தைத் தோற்றுவித்தார். அவர் இந்தியாவின் புனித பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார்.[5][6]