புனித தோமையார் மலை
From Wikipedia, the free encyclopedia
பரங்கி மலை (St. Thomas Mount) என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது சென்னை நகரின் வெளிப்புறத்தில் ஒரு சிறு மலை ஆகும். இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை விமான நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது. இது புனித தாமஸ் மலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு வருகிறது.
பரங்கிமலை St. Thomas Mount | |
---|---|
அருகாமையில் உள்ளது | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | தாம்பரம் |
அரசு | |
• நிர்வாகம் | செ.பெ.வ.கு. |
மொழிகள் | |
• ஆட்சி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
திட்ட நிறுவனம் | செ.பெ.வ.கு. |
கிறித்தவ சமயத்தை முதன்முதல் இந்தியாவுக்குக் கொணர்ந்தவர் இயேசுவின் சீடரான புனித தோமா என்பதும், அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக இம்மலையில் உயிர்நீத்தார் என்பதும் மரபுவழிச் செய்தி. அதன் அடிப்படையில் இம்மலை புனித தோமையார் மலை என்னும் பெயர் பெற்றது.
போர்த்துகீசியரின் வருகையைத் தொடர்ந்து இம்மலைப் பகுதியில் பல கிறித்தவர்கள் குடியேறினர். 300 அடி உயரத்தில் உள்ள அம்மலைமீது போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் 1523-ஆம் ஆண்டில் அழகியதொரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்.
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1986, பெப்ருவரி 5-ஆம் நாள் இம்மலைக் கோவிலைச் சந்தித்தார்.
புனித தோமையார் மலையின் அடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் அலுவலர் பயிற்சி அக்காதெமி (Officer Training Academy [OTA]) அமைந்துள்ளது. அங்கே தொடருந்து நிலையமும் இப்பெயருடன் விளங்குகிறது.