![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/42/Plant_cell_structure-ta.svg/langta-640px-Plant_cell_structure-ta.svg.png&w=640&q=50)
தாவர உயிரணு
From Wikipedia, the free encyclopedia
தாவரக் கலங்கள் மெய்க்கருவுயிரிக் கல வகையைச் சார்ந்தது. தாவரக் கலங்கள் மற்ற மெய்க்கருவுயிரி கலங்களைக்காட்டிலும் பல சிறப்புப் பண்புகளுடன் வேறுபட்டு காணப்படுகின்றன. இவற்றின் சிறப்புப் பண்புகள் பின்வருமாறு:
- கலமையத்தில் நீர்மம் நிரம்பிய புன்வெற்றிடம் எனப்படும் உறுப்பு கொடைக்கணிக[1] உறையால் சூழப்பட்டுள்ளது . இதன் பணிகளாக, கல அழுத்தத்தை சீராக்குதல், பிற சிறிய மூலக்கூறுகளின் இடப்பெயர்ச்சியை கட்டுப்படுத்தல், தேவையான பொருள்களை சேமித்தல், தேவையற்ற புரதம், கல நுண்ணுறுப்புகளைச் செரித்தல் ஆகியன அமைகின்றன .
- கலச்சுவர் மாவியம், மரவிழையம் ஆகியவற்றால் ஆனது. பெரும்பாலும் உயிரணு மென்படலத்துக்கு வெளியே உள்ள முற்கணிகம் மரப்பசை(லிக்னின்), பெக்டின் ஆகியவற்றைச் சுரக்கிறது, இந்த அமைப்பு பிற நுண்ணுயிரிகளிடமிருந்து வேறு பட்டுக் காணப்படுகிறது, பூஞ்சைகளின் கலச்சுவர் கைட்டினால் ஆனது, குற்ருயிரியின் கலச்சுவர் பெப்டிடோகிளைக்கனால் ஆனது. கலச்சுவர் பல முதன்மையான செயல்களைச் செய்கிறது . கலத்திற்கு உருவத்தை கொடுக்கிறது. இழையம், நுண்ணுறுப்புக்களை வடிவமைக்கிறது. கலத்துக்கு இடையே நடக்கும் மூலப்பொருள்கள் கடத்துதல், தாவர நுண்ணுயிரிகளின் தொடர்புக்குக் காரணமாக உள்ளது . இரு கலங்களிடையிலான தொடர்பிற்கு ஏதுவான சிறப்பு அமைப்பாக கலநீர்ம டேஸ்மெட்டா அமைந்துள்ளது முதன்மை கலச் சுவரில் உள்ள சிறு துளைகள் மூலம் கலப்படலம் மற்றுமமகக்கண்க வலைப்பின்னல் போன்றவை ஒரு கலத்திலிருந்து மற்றொரு கலத்துக்குத் தொடர்பு கொள்கிறது.[2]
- கணிகம் என்னும் உறுப்பு பசுங்கணிகமாக, பச்சையத்தைக் கொண்டுள்ளது, இதில் பச்சை நிற துகள்கள் உள்ளன. இப்பச்சையம் சூரிய ஒளியை எடுத்து கொண்டு தாவரத்திற்கு தேவையான உணவை தானே ஒளிச்சேர்க்கை மூலம் தயாரித்து கொள்கிறது. மற்ற வகையான கணிகங்கள் மாக்கணிகம் மாவுச்சத்தைச் சேமிக்கிறது , கொழுங்கணிகம் கொழுப்பு பொருள்களை சேமிக்கிறது, பச்சையங்கள் நிறமிகளை உற்பத்தி செய்து சேமிக்கிறது. ஊன்குருத்து அல்ல்லது இழைமணியின் மரபணுத்தொகையில் 37 உள்ளது போல்,[3] கணிகங்களின் மரபணுத்தொகையில் 100-120 மரபணுக்கள் உள்ளன .[4]
- பிளவுக் கணிகத்தை முன்வடிவாக வைத்து கலப் பிரிவின்போது கலத் தடுப்பு சுவர் உருவாதல் தாவர, சில பாசிகளின் சிறப்புப் பண்பு ஆகும். விலங்கு கலங்களில் உள்ளது போல், இருவாழ்வி தாவரம், பெரணி சைக்காய்டுகள், சிங்கோத் தாவரங்கள் நீந்தும் உயிர்க்கலங்களைப் பெற்றுள்ளன .
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/42/Plant_cell_structure-ta.svg/640px-Plant_cell_structure-ta.svg.png)