From Wikipedia, the free encyclopedia
தாவரக் கலங்கள் மெய்க்கருவுயிரிக் கல வகையைச் சார்ந்தது. தாவரக் கலங்கள் மற்ற மெய்க்கருவுயிரி கலங்களைக்காட்டிலும் பல சிறப்புப் பண்புகளுடன் வேறுபட்டு காணப்படுகின்றன. இவற்றின் சிறப்புப் பண்புகள் பின்வருமாறு:
இவை உயிருள்ள கலங்கள் ஆகும் . இவற்றின் வேலை சேமிப்பும் ஒளிசேர்க்கைக்கு உதவுதலும் ஆகும் . இலைகளில் கடத்துகலம், ஊட்டச்சத்துக் கலம் மட்டுமமல்லாமல் முதன்மையாக சோற்றுத்திசுக் கலங்களும் காணப்படுகின்றன . இலைகளின் மேல்புறத்தோலில் உள்ள சோற்றுத்திசுக் கலங்கள் ஒளி ஊடுருவும், வளிமப் பரிமாற்றம் செய்யும் தனிச்சிறப்புடையது ஆகும் .பரன்கைமா செல்கள் மெல்லிய ஊடுருவும் தன்மையுள்ள முதன்மை சுவரை கொண்டுள்ளது . இது இருகலங்களுக்கு இடையே மூலக்கூறுகள் நகர வழிவிடுகிறது . இந்தக் கலங்களில் உள்ள கலக்கருநீர்மம் பல உயிர்வேதியல் நிகழ்வுகள் நடைபெற காரணமாக உள்ளது . இக்கலங்கள் பல பசுங்கணிகங்களை கொண்டுள்ளது . இவை முதன்மையாக ஒளிசேர்க்கையில் ஈடுபடுகின்றன . எனவே இவைகள் பசுந்திசுக் கலங்கள் எனப்படுகின்றன . உருளைக்கிழங்கு , பயறுவகை தாவரங்களின் வித்திலைகளில் இக்கலங்கள் சேமிக்கும் செயலைச் செய்கின்றன .
இவை உயிருள்ள கலங்கள் ஆகும். இவை முதன்மைக் கலச் சுவரை மட்டும் பெற்றுள்ளன . இந்தக் கலங்கள் ஆக்குதிசு வழி த்தோன்றல்களால் முதிர்ச்சி அடைகின்றன . இவை தொடக்க நிலையில் கலங்சோற்றுத்திசுக் கலங்கள் போன்று காணப்படும். ஆனால் பிறகு மாற்றம் அடைந்து காணப்படும் . இவற்றில் கணிகங்கள் உருவாகாது. சுரக்கும் தன்மை உடைய அகநீர்ம வலை, கோல்கி வலை வளர்ச்சி அடைந்து கூடுதலாக முதல் நிலை கலச் சுவரில் சுரக்கும் . மூன்று அல்லது அதிக கலங்கள் இணையும் இடத்தில் கலச் சுவர் மெலிந்து காணப்படும். பிற அமைப்பு முறைகளில் கலச் சுவர் தடித்து காணப்படலாம்.விதை மூடிய இரு வித்திலை தாவரங்களின் கோலன்கைமா கலங்களின் கலச் சுவரின் பெரும்பகுதி பெக்டின் பகுதி மரவிழையத்தால் ஆனது . வன்திசுக் கலங்கள் பொதுவாக நீண்டு காணப்படும் . செல் பிரிதல் நிகழ்வு குறுக்காக நடந்து தடுப்பு சுவர் போன்று காணப்படும் . வன்திசுக் கலங்களின் பணி தாவரம் நீளவாக்கில் வளரும்போது மைய அச்சிற்கு துணை நிற்பது ஆகும். மேலும் திசுவிற்கு நெகிழ்வும் கடினத்தன்மையும் அளிக்கிறது இதன் முதனிலைக் கலச் செல் சுவரில் மரப்பசை இல்லாததால் நெகிழ்வாகக் காணப்படும்.
கிளிரென்கைமா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது கிளீரோஸ் என்றால் கடினம் என்று பொருள் . இதன் பணி தாங்குதல் ஆகும் . இந்த செல்லை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் . அவை கிளிராய்ட் அல்லது கற்செல்கள் மற்றும் நார் செல்கள் . இந்தக் கலங்கள் இரண்டாம் நிலை கலச்சுவரை முதன்மை கலச்சுவருக்கு உள்ளாக உருவாக்குகிறது . இரண்டாம் நிலை கலச்சுவர் மரப்பசையால் ஆனது .இது கடினமானது . கலத்திற்குள் நீர் நுழையாதவாறு தடுக்கிறது. இதனால் இந்த செல்கள் நீண்ட நாள் உயிர் வாழ முடியாது . ஆகையால் செல்லின் வளர் சிதைமாற்றத்திற்கு தேவையான பொருள்களை கடத்தமுடியாது . கிளிரென்கைமா செல்கள் முதிர்ச்சி அடையும் பொழுது இறந்து விடுகிறது . செலின் சைட்டோபிளாசத்தையும் இழந்து மத்தியில் ஒரு வெற்றிடம் உருவாகிறது . இதன் பணிகள் பழங்கள் , இலைகளுக்கு கடின தன்மை கொடுக்கிறது . இக்கடினத்தன்மை புழுக்கள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து தாவரத்தை பாதுகாக்கிறது .
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.